14.3.09

இணைய தள வடிவமைப்புக்கு(Web Design) ஒரு அசத்தல் உதாரணம்

 Sensisoft எனும் நிறுவனத்தின் இணைய தளம் இது. வழக்கமான அளவில் இல்லாமல் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட தளம் இது. தொடுப்பை சொடுக்கி தளத்திற்கு செல்லலாம்.


Sensisoft 









நன்றி- premkg

10.3.09

பெங்களூர் - ஓசூர் ரோடு - பறக்கும் ஹைவே

பெங்களூரில் இருந்து ஓசூர் போகும் வழியில் பாதி தூரத்தில் உள்ளது, எலக்ட்ரானிக் சிட்டி. எஸ்.எம்.கிருஷ்ணா ஆட்சிக்காலத்தில் எலக்ட்ரானிக், ஐ.டி. கம்பெனிகளுக்கு சலுகை கொடுத்து ஆரம்பிக்கப்பட்ட இடம் இது. இதில் கம்பெனிகள் அதிகம் ஆக ஆக, இந்த சாலையில் பயணப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. இந்த சாலைதான் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் இருந்து பெங்களூர் வரும் வாகனங்களுக்கும் நுழைவு வாயில். இது போதாதா, வாகன நெரிசலுக்கு? அடிக்கடி இந்த ரோட்டுல போயிட்டு வந்தா காசநோய், தோல் வியாதி, பிரஷர் எல்லாம் வரும். அப்புறம் கொஞ்சம் நாள் கழிச்சி பொறுமை குணமும் கூடிடும்.



இதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ஓசூர் ரோடு எலிவேட்டட் ஹைவே பிராஜக்ட். ரோட்ட நல்லா விரிவாக்கி, ஒரு பாலத்தை கட்டுறதுதான் பிளான். பாலம் ஒரு கிலோமீட்டர், ரெண்டு கிலோமீட்டர் இல்ல, கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டருக்கு ஒரே பாலம். மத்திய அரசின் நெடுஞ்சாலை துறை, கர்நாடக அரசு மற்றும் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள நிறுவனங்களின் கூட்டமைப்பு போன்றவற்றின் கூட்டணியில் உருவாக்கப்படும் திட்டம் இது. ஆரம்பிச்சு வைச்சது மன்மோகன் சிங். 450 கோடி ரூபாய் செலவு. கட்டுனதுக்கப்புறம் வண்டியில போறவன்கிட்ட புடுங்கிடுவாங்க.



இந்த பாலம் கட்டுற விதம், எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. மண்ணு, சல்லி, கம்பி, சிமெண்ட் எதுவும் ரோட்டுல கிடக்குறது இல்ல. எல்லாத்தையும் தனிதனியா வெவ்வேறு இடங்களில் செஞ்சு, இங்க வந்து பிக்ஸ் பண்ணிடுறாங்க. முதல்ல தூணை வைக்குறாங்க. அப்புறம் துண்டு துண்டா ஒட்டி பாலத்தை உருவாக்கிடுறாங்க.



ரெண்டு தூணுக்கிடையில் இவ்வளோ தூரத்தில எப்படி இத்தனை பாகங்களை சேர்த்து ஒண்ணா வைக்குறாங்க? அதுவும் எப்படி இப்படி நிக்குது?ன்னு எனக்கு ஆரம்பத்துல ஏகப்பட்ட சந்தேகம்.



மேட்டர் ஒண்ணுமில்லை. ஊசி நூலுல பாசி மணி கோர்க்குற மாதிரி, பாலம் கட்டுற டெக்னாலஜி இது.கண்ணுக்கே தெரியாத கம்பிதான் மெயினு.




இப்ப, ரோட்ட ஒரளவுக்கு பெரிசாக்குனதுக்கே கொஞ்சம் டிராபிக் குறைஞ்ச மாதிரி தான் இருக்கு. நாலு இடங்களில் சாலையை கடக்க, சப்வேயும் கட்டி இருக்காங்க. மத்தியான வெயில் நேரத்தில பாலத்துக்கு கீழேயே போனா, பத்து கிலோமீட்டருக்கு வெயில இருந்து தப்பிச்சிடலாம். மழை பெயும்போதும் அப்படியே. ஆனா, நான் மாட்டேன்ப்பா.



கீழே ரோட்டுல ஆறு லேன். மேலே பாலத்துல நாலு லேன். இது தவிர, ரெண்டு பக்கமும் சர்வீஸ் ரோடு. முக்கால் மணி நேர பயணத்தை, பத்து நிமிசமா இது குறைச்சிடுமாம். இந்த வகையில ரோடு பிளஸ் பாலம் கட்டுறது இதுதான் இந்தியாவில் முதல்முறைன்னு சொல்லிக்கிட்டாங்க.




ஆரம்பத்தில் ரெண்டு வருஷத்தில் முடிப்பதாக பிளான். நீண்டுக்கொண்டே செல்கிறது. இந்த வருடம் முடிந்துவிடும் என்றே தோன்றுகிறது.




இந்த பாதை முழுமையான செயல்பாட்டுக்கு வந்தபின், வாகன நெரிசல் இருக்காதுன்னு நினைச்சிட்டு இருக்காங்க. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு? பாலத்துக்கு மேல சிக்னல் வச்ச ஊருதானே இது?

நன்றி .சரவண குமரன்-குமரன் குடில்

14.1.09

மனித நேயம் vs விலங்கு நேயம்

இயந்திரமயமான நம் வாழ்க்கை பாதையிலே, நாம் எங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறோம். எவருக்கு என்ன நடந்தாலும் நம்முடைய வேலைகளை பார்த்துக்கொண்டு போய்ட்டே இருக்கின்றோம். இதுதான் இயந்திர வாழ்க்கை என்கிறார்கள். மனிதம் என்ற ஒன்று இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. மனிதம் செத்துப்போய், மனிதன் என்ற பெயருடன் வாழ்வதில் என்ன பயன்...? அப்படி வாழ்பவர்கள்தான் இன்று உலகத்திலே அதிகமாக இருக்கின்றார்கள்.

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்கிறார்கள். இதில் பல மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் குரங்கிற்கும் மனிதனுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அதனால்தான் முதல் பரிசோதனைகளுக்காக குரங்கினைப் பயன்படுத்துகிறார்கள் விஞ்ஞானிகள். இங்கு நான் சொல்ல வந்தது நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம்.

பாதையிலே எவர் காயப்பட்டுக் கிடந்தாலும் அவர்களுக்கு உதவுவதற்கு முன்வருபவர்கள் அரிதே. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இயந்திரமயமான வாழ்க்கையில் நின்று அடுத்தவன் பிரச்சினையைப் பற்றி யோசிப்பதற்கு நேரமின்மை. மற்றையது, தேவையில்லாத பிரச்சினைகளில் தலைபோட்டால் நாங்கள் மாட்டிக் கொள்வோமா என்ற பயம். இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.

ஆனால், இந்தக் குரங்கினைப் பாருங்கள். தன்னுடைய குட்டி, வாகனத்தில் அடிபட்டுவிட்டது. அடிபட்ட குட்டியினைத் தாக்குவதற்கு நாய் முயற்சிக்கிறது. துணிந்து போராடி, நாயினை விரட்டியடிக்கிறது தாய்க்குரங்கு. இதுதான் தாய்மை என்பது. தன் உயிரைப் பணயம் வைத்தாவது தன் குழந்தையைக் காப்பவள் தாய். அந்தத் தாயின் அன்பிற்கு நிகர் வேறு எதுவுமே கிடையாது. இந்த உலகத்தில் மட்டுமல்ல எந்த உலகத்திலும் அந்த அன்பு கிடைக்காது.

மனிதம் செத்துக்கொண்டிருக்கும் இயந்திர உலகில், இந்தக் குரங்கில் செயல் சற்று திருப்தியளிக்கிறதல்லவா?

Thanks .apmathan blog- Mathumathi


11.1.09

புதிய கண்டுபிடிப்பு(மனைவியுடன் கார் ஓட்டும் ஆண்களுக்காக)

சமிபத்தில் ஒரு நிறுவனம்,இந்த அருட்பெரும் ,இந்த நூற்றாண்டின் அரியதொரு கண்டுபிடிப்பினை நிகழ்த்தி உள்ளது....இந்த உபகரனதோடு வண்டி ஓட்டும் பொழுது விபத்துக்கள் வெகுவாக குறைக்க பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது....(உபயம் விஜயகாந்த் இல்லை)

இந்த கண்டுபிடிப்புக்கு மற்றும் கண்டுபிடிப்பாளருக்கு  அனைத்து கணவன் மார்களும் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர்....
அந்த அறிய கண்டுபிடிப்பினை கீழே உள்ள படத்தில் காணலாம்....
|
|

|

|

|

|



|







நன்றி கார்த்தி.

7.1.09

விண்டோஸ் இயங்கு தளம் வரலாறு



உலகின் 90சதவிகித கணினிகளில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளம்(Operating System)முதல் பதிப்பிலிருந்து,வரப்போகும் விண்டோஸ் 7 வரை அடைந்துள்ள மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை படங்கள் மூலம் சுவாரஸ்யமாக அலசலாம்.


1) விண்டோஸ் 1.0

விண்டோஸ் இயங்கு தளத்தின் முதல் 7 பதிப்பை 1983 ஆம் ஆண்டிலேயே பில் கேட்ஸ் அறிவித்திருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்துடனான சட்ட சிக்கலில் மாட்டிகொண்டதால் 1985 ஆம் ஆண்டு தான் அறிமுகமானது. MS-DOS இயங்கு தளத்தின் நீட்டிப்பு போன்றே காணப்பட்ட இந்த இயங்கு தளம் தோல்வியடைந்தாலும் மல்டி டாஸ்கிங் மற்றும் சுட்டிக்கு(Mouse) ஆதரவு தந்தது.


2) விண்டோஸ் 2.0

ஆப்பிள் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆப்பிளின் மேக் இயங்குதளத்தின் சில வசதிகளை விண்டோஸ் 2.0 இல் அறிமுகம் செய்தது. இருந்தும் ஒப்பந்தத்தை மீறி 170 காப்புரிமை பெறாத வசதிகளை பயன்படுத்தியதாக மைக்ரோசாப்ட்டை, ஆப்பிள் நீதிமன்றத்திற்கு இழுத்தது தனிக்கதை.


3) விண்டோஸ் 3.0

1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நினைவகத்தை சிறப்பாக கையாண்ட, புதிய வடிவில் வெளிவந்த இந்த பதிப்பே விண்டோசின் முதல் வெற்றிகரமான பதிப்பு. இரண்டு வருடங்களில் ஒரு கோடி வட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இதன் பிறகே மைக்ரோசாப்ட் தன் முழு கவனத்தையும் இயங்கு தள சந்தையில் செலுத்தியது.


4) விண்டோஸ் 3.11

விண்டோஸ் 3.0 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பே இது. பல் ஊடக(Multimedia)வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வெளியானது.


5) விண்டோஸ் 3.11 NT

32 பிட் ப்ராசசர்களுக்காக உருவாக்கப்பட இந்த பதிப்பு,பொறியாளர்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்பட்டதால் அவ்வளவாக வரவேற்பில்லாமல் போனது.

6)விண்டோஸ் 95

1995 ஆம் ஆண்டு வெளியான இந்த பதிப்பு பெரும் வெற்றி பெற்று உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்த்தது. இந்த பதிப்பில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவியும் சேர்ந்தே வந்தது.ஸ்டார்ட் பொத்தான்,டாஸ்க் பார் போன்ற வசதிகள் இந்த பதிப்பிலிருந்தே ஆரம்பித்தது.


7) விண்டோஸ் 98

விண்டோஸ் 95 ஐ ஒப்பு நோக்கும்போது சற்று மேம்படுத்தப்பட்டு, FAT 32 கோப்பு வசதியுடன்,எக்ஸ்ப்ளோரர் உலாவி உள்ளீடு செய்யப்பட்டு வெளிவந்தது.


8) விண்டோஸ் 2000

2000 ஆம் ஆண்டு வெளியான NT வரிசை பதிப்புகளில் மேம்படுத்தப்பட்ட பதிப்பு.

9) விண்டோஸ் ME

இந்த வரிசையில் ஒரு தவறுதலான பதிப்பாக கருதப்படும் ME 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. பாதுகாப்பு குறைபாடுகள், உறுதியற்ற தன்மையுடன் இருந்த இந்த பதிப்பு படு தோல்வியடைந்தது.


10) விண்டோஸ் XP

கோப்புகள் மேலாண்மை(File Management),பாதுகாப்பு,உறுதி,வேகம் என அனைத்து பிரிவுகளிலும் மேம்படுத்தப்பட்டு 2001 ஆம் ஆண்டு வெளியானது. இன்று வரை அலுவலகங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.


12)விண்டோஸ் விஸ்டா

பார்வைக்கு புதிய மெருகோடு 2007 ஜனவரி மாதம் வெளியானது. பல மென்பொருட்கள் இந்த பதிப்போடு சரிவர இயங்காததால், மிக அதிக நினைவகத்தை எடுத்து கொள்வதால் பலர் விண்டோஸ் xp பதிப்பையே வைத்து கொண்டுள்ளனர்.


13) விண்டோஸ் 7

வெளியாகும் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், சென்ற வாரம் சில டோரன்ட்(Torrent) தளங்களில் முறையற்ற பதிப்பு வெளியாகிவிட்டது. மற்றெந்த பதிப்புகளையும் விட வேகமானதாகவும் இருப்பதாக நம்பப்படுகிறது.



நன்றி: விக்கி,