16.4.08

சுஜாதா மறைவுக்குப் பிறகு



சுஜாதா மறைவுக்குப் பிறகு ..
தமிழ் கூறும் நல்லுலகின் இவ்வளவு பெரிய இழப்பை யாராலும் சரிக்கட்ட முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான்.சுஜாதாவின் வீட்டில் நேற்று அலைமோதிய கூட்டத்தைப் பார்த்தபோது எனக்கு ஒன்று தான் தோன்றியது:

"இன்று இப்படிக் கூட்டம் இருந்தாலும், நாளை முதல் இதெல்லாம் வடிந்து போக ஆரம்பிக்கும். அது உலக நியதி. இனி வரும் நாட்களில் தான் அவருடைய குடும்பத்தார் தனிமையில், சோகத்தில், பழைய நினைவுகளை அசை போட்டபடி, தவிக்க ஆரம்பிப்பார்கள். அவர்களைக் கொஞ்சமாவது தேற்றும் வண்ணம் நாம் ஏதாவது செய்தே ஆக வேண்டும்".'என்னால் முடிந்த அளவுக்கு,

சென்னையில் இருக்கும்போதெல்லாம் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது, என்னாலான சின்னச்சின்ன உதவிகளை அவர்களுக்குச் செய்வது, மற்ற நண்பர்கள் மூலமாகவும் இதையெல்லாம் தொடரச் செய்வது' என்பது ஓரளவுக்கு நன்மை பயக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.எந்த விதமான விளம்பரத்தையும் எதிர்பாராமல்,

பல பிரபல திரையுலக நண்பர்கள் சுஜாதா குடுமப்த்தினருக்கு உதவியிருப்பது, உதவி வருவது எனக்குத் தெரியும். அந்த நல்ல நெஞ்சங்கள் நீடூழி வாழட்டும்.

பல்பரிமாண எழுத்தாளர் சுஜாதா




பல்பரிமாண எழுத்தாளர் சுஜாதா
மரணம் தொடர்பாக சுஜாதா ஆயத்தமாகவே இருந்தார் எனச்சொல்ல வேண்டும்। "இப்போதெல்லாம் ஹிந்துவில் முதலில் obtituary தான் பார்க்கிறேன்। இறந்தவர் என்னைவிட இளையவர் என்றால் பரவாயில்லை நாம் இன்னும் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுகொள்கிறேன்। என்னை விட வயதானவர் என்றால் என் நாள் எந்நாள் என்று யோசனை வருகிறது" -


இதை அவரின் 'கற்றதும் பெற்றதும்' என்ற நூலில் குறிப்பிட்டிருந்தார்। எனது வாசிப்பு பரிச்சயங்களில் அதிசயிக்க வைத்த எழுத்தாளர்।
தொடாத தலைப்பே இல்லை எனும் அளவிற்கு அனைத்து துறையிலும் தனது எழுத்தைக் கொண்டு சேர்த்தவர்। 'எந்த மரபையும் உடைக்கின்றபோது ஒரு புதுமையான இல
க்கியம் தோன்றும்' என்ற வகையில் அதுவரை இருந்த எழுத்து நடைகளை மாற்றி தனக்கென்ற வகையில் வேகமான சுவாரசியமான நடைக்குள் தமிழ் மொழியைக்கொண்டு வந்தவர்।


இவரது எழுத்து வரிகளில் கலந்திருக்கும் நகைச்சுவை அலாதியானனது: நாசூக்கானது। சொற்களின் அளவைக்குறைத்து கதையில் தன்னுடன் வாசகனையும் வரச்செய்து பெரும்பாலானவற்றை வாசகனே ஊகித்து உணரும் வகையிலான இரசாயனத்தை தனக்கும் வாசகனுக்குமிடையில் தனது மொழிநடை மூலம் ஏற்படுத்திக்கொண்டவர்।


சூழ்நிலைகளையும் சம்பவங்களையும் கூர்ந்து அவதானித்து அவற்றை மிகச்சில சொற்களில் சொல்லி முடிக்கின்ற சாகசக்காரர்। தலைமுறை இடைவெளி இல்லாமல் இக்கால இளைஞர்களினதும் எண்ணஓட்டங்களையும் புரிந்து கொண்டு எழுத்திலும் இளமையைக் கொண்டு வந்தவர்। ஆரம்பகால இவரது சிறுகதை முயற்சிகள் இன்றும் பிரமிப்பூட்டுபவை। வேறுபட்ட கருக்கள், வேறுபட்ட அணுகுமுறைகள் எழுத்தில் வடிக்கமுடியாதவை। சிக்கலான மருத்துவ, விஞ்ஞான,தொழில்நுட்ப,கணணி விடயங்களையும் மிக எளிமையான எடுத்துக்காட்டுக்களோடு பாமரரும் விளங்கும் வகையில் தமிழில் தந்தவர்।


இளமைக்காலத்தை பாட்டியுடன் சிறீரங்கத்தில் கழித்த பசுமையான நினைவுகளை சிறீரங்கத்து தேவதைகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்। கவிஞர் வாலி சிறீரங்கத்தில் இவரது அயலவர்। திருச்சி சென்।ஜோசப் கல்லூரியில் பெளதிகவியலில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும்போது


முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுடன் சகபாடியாக இருந்திருக்கிறார்। இதன் பின்னர் சென்னை தொழில்நுட்ப நிறுவகத்தில் இலத்திரனியல் துறையில் பட்டம் பெற்றார்। இந்திய அரசுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கும் குழுவிற்கு தலைமை தாங்கி செயற்பட்டவர்। இவரது விஞ்ஞானக்கதைகளும் அற்புதமானவை। என் இனிய இயந்திரா॥ மீண்டும் ஜீனோ போன்ற நூல்களில் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளும் ஒரு எந்திர நாய்பற்றி கற்பனை செய்துள்ளார்। அது தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு ஒரு நிலையில் தவறே செய்யாத ஒரு நிலையை அடைகிறது।


இந்த நாயைவைத்து பின்னப்பட்ட அருமையான விஞ்ஞானக்கதை। இவரது துப்பறியும் நாவல்கள் இவரிற்கு அதீத இரசிகர்களைத் தேடித்தந்தது। இவரது கற்பனையான பாத்திரங்கள் உண்மையிலேயே இருக்கிறார்கள் என்று பலரை நம்பவைத்தது இவரது எழுத்து। வெகுஜனப்பத்திரிகைகளிலும் சரி, சிறுபத்திரிகைகளிலும் சரி தனக்கென்று ஒரு முத்திரையை பதித்துக்கொண்டவர்। இவர் எழுதிய நாடகங்கள் கூடப்புகழ்பெற்றவை। பூரணம் விஸ்வநாதன் நடிப்பில் இவரது நாடகங்கள் சிலாகிக்கப்படட்டன। நாடகத்தையும் மேடை அமைப்பு பின்னணி முதலிய தொழில்நுட்ப அம்சங்களையும் உள்ளடக்கியதாக எழுதியது அவரது பரந்து பட்ட அறிவிற்கு சான்று।
'கனவுத்தொழிற்சாலை' என்ற நூல் சினிமா திரைஉலகின் ஜிகினா பக்கத்திற்கான மறுபக்கத்தைக்காட்டி சாதாரண மக்களுக்கும் திரைஉலகு குறித்த உண்மை நிலையை எடுத்துக்காட்டியது। இவரது தயாரிப்பில் உருவான பாரதி படம் அனைவரதும் பாராட்டைப்பெற்றது। அறிவியல் சார்ந்த ஒரு படமாக 'விக்ரம்' என்ற படத்திற்கான கதை திரைக்தையை எழுதினார்। தனது கதைகள் திரைப்படமாகும்போது நடக்கும் கதை சீர்குலைவுகளை விமர்சித்த இவர் ஒரு திரைப்படம் ஒன்று உருவாகுவதற்கான சவால்கள் சிரமங்கள் குறித்தும் அவ்வப்போது எழுதியுள்ளார்। சென்னை மீடியா ட்ரீம்சின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்।
சிறுகதை நாவல்களை விட இவர் ஜீனியர் விகடனில் எழுதிய ஏன் எதற்கு எப்படி?, கணையாளியில் எழுதிய 'கணையாளியின் கடைசிப்பக்கம்', ஆனந்த விகடனில் எழுதிய கற்றதும் பெற்றதும் என்பவை மிகப்பிரபலமாயின। மூளை மற்றும் ஓமோன்கள் குறித்து எழுதிய 'தலைமைச்செயலகம்' சிறந்த அறிவியல் நூலாகும்। அவரது நுண்ணறிவும் ஆராயும்திறனும் மொழித்திறனும் சேர்ந்து எமக்கொரு நல்ல எழுத்தாளரைத்தந்தது.
பெண்கள் குறித்து சற்று அதிகமாகவே வர்ணிப்பவர் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் 'எப்போதும் பெண்' என்ற தன் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்। 'இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள், படியுங்கள்। இதன் விஷயம் எனக்குப்பிடித்தமானது। பொய் இல்லாமல் பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன்। பெண் என்கிற தீராத அதிசயத்தின்பால் அன்பும் ஆச்சரியமும் ஏன் பக்தியும்தான் என்னை இதை எழுதச்செலுத்தும் சக்திகள்'


ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்தைந்தாம் ஆண்டு மே மாதம் மூன்றாம் நாள் பிறந்த சுஜாதா அவர்கள் தனது 73ம் வயதில் காலமாகியிருக்கிறார்கள்। சிறீரங்கநாதரில் ஆழ்ந்த பக்தியும் ஆழ்வார்களின் பிரபந்தங்களில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்ட சுஜாதா அவர்களின் வாழ்வு நிறைவானது என்பதில் ஐயமில்லை। அன்னாரின் எழுத்துப்பணிக்கு சிரம்தாழ்த்திய அஞ்சலிகள்।
கவிதைகளிலும் ஹைக்கூக்களிலும் வெண்பாக்களிலும் நாட்டங்கொண்டவராகிய இவர் தனது எழுத்துக்களில் இளைய தலைமுறையினரை அறிமுகப்படுத்தவும் தவறுவதில்லை। விஞ்ஞானம் சம்பந்தமான ஹைக்கூக்கள் சைஃபிகூ எனப்படுகின்றன। இதில் சுஜாதாவின் முயற்சி இவ்வாறாக இருக்கிறது।
சந்திரனில் இறங்கினேன்
பூமியில் புறப்படும்போது
கதவைப்பூட்டினேனா?
அவரது எழுத்துக்கு என்றும் மரணமில்லை.


கருத்துக்கள்:
அன்புடன் புகாரி said...
சிறுகதை நாவல்களை விட இவர் ஜீனியர் விகடனில் எழுதிய ஏன் எதற்கு எப்படி?, கணையாளியில் எழுதிய 'கணையாளியின் கடைசிப்பக்கம்', ஆனந்த விகடனில் எழுதிய கற்றதும் பெற்றதும் என்பவை மிகப்பிரபலமாயின। மூளை மற்றும் ஓமோன்கள் குறித்து எழுதிய 'தலைமைச்செயலகம்' சிறந்த அறிவியல் நூலாகும்। அவரது நுண்ணறிவும் ஆராயும்திறனும் மொழித்திறனும் சேர்ந்து எமக்கொரு நல்ல எழுத்தாளரைத்தந்தது.உண்மை. நான் சமீபகாலமாக வாசித்ததெல்லாம் அவரின் கட்டுரைகளைத்தான். சிறுவயதில்தான் கதைகள் வாசித்தேன்.அன்புடன் புகாரி


சுஜாதாஞ்சலி



சுஜாதாஞ்சலி
சிறுகதை, நாவல், நாடகம், அறிவியல் கதைகள், அறிவியல் கட்டுரைகள். கவிதைகள், பொதுக் கட்டுரைகள், திரைப்பட கதை வசனம், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் முத்திரை பதித்த திரு சுஜாதா [S.ரங்கராஜன்] நேற்றுக்காலமானார்.அன்னாரக்கு எமது அஞ்சலிகள்.


ஈழத்தமிழர் பற்றியும் அவர் தப்பான அபிப்பிராயங்களைக்கொண்டிருக்காத மனிதர் அவர்.


இத பற்றி கானாபிரபா அண்ணாவின் வலைப்பூவில் அவருக்கு சுஜாதா வழங்கியபேட்டியில் கேட்டேன் " நம்பிக்கையைத் தளர விடாதீர்கள் " என்ற அவரின் கூற்று இன்னும் மனசில் ஒலிக்கின்றது.


அன்னாரைப்பற்றிய சிறுதுளிகள்


எழுதிய நாவல்கள்


பதவிக்காக


ஆதலினால் காதல் செய்வீர்


பிரிவோம் சந்திப்போம்


அனிதாவின் காதல்கள்


எப்போதும் பெண்


என் இனிய இயந்திரா


மீண்டும் ஜீனோநிலா நிழல்ஆ


கரையெல்லாம் செண்பகப்பூ


யவனிகாகொலையுதிர் காலம்


வசந்த் வசந்த்


ஆயிரத்தில் இருவர்


பிரியா


நைலான் கயிறு


ஒரு நடுப்பகல் மரணம்


மூன்று நிமிஷம்


கணேஷ்காயத்ரிகணேஷ்


x வஸந்த்அப்ஸரா


மறுபடியும் கணேஷ்


வீபரீதக் கோட்பாடுகள்


அனிதா இளம் மனைவிகாந்தளூர் வசந்தகுமாரன் கதைபாதிராஜ்யம்24 ரூபாய் தீவுவசந்தகாலக் குற்றங்கள்வாய்மையே - சிலசமயம் - வெல்லும்கனவுத்தொழிற்சாலைரத்தம் ஒரே நிறம்மேகத்தைத் துரத்தினவன்நிர்வாண நகரம்வைரம்ஜன்னல் மலர்மேற்கே ஒரு குற்றம்உன்னைக் கண்ட நேரமெல்லாம்நில்லுங்கள் ராஜாவேஎதையும் ஒருமுறைசெப்டம்பர் பலிஹாஸ்டல் தினங்கள்ஒருத்தி நினைக்கையிலேஏறக்குறைய சொர்க்கம்என்றாவது ஒரு நாள்நில் கவனி தாக்குஎழுதிய குறுநாவல்கள்ஆயிரத்தில் இருவர்தீண்டும் இன்பம்குரு பிரசாத்தின் கடைசி தினம்மெரினா சிறுகதைஸ்ரீரங்கத்துக் கதைகள்கட்டுரைகள்கணையாழியின் கடைசி பக்கங்கள்கற்றதும் பெற்றதும்கடவுள் இருக்கிறாராதலைமை செயலகம்எழுத்தும் வாழ்க்கையும்ஏன் ? எதற்கு ? எப்படி ?சுஜாதாட்ஸ் திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்காயத்ரிகரையெல்லாம் செண்பகப்பூப்ரியாவிக்ரம்வானம் வசப்படும்நாடகம்Dr. நரேந்திரநாத்தின் வினோத வழக்கு்கடவுள் வந்திருந்தார்திரையாசிரியராக பணியாற்றிய திரைப்படங்கள்ரோஜாஇந்தியன்ஆய்த எழுத்துஅந்நியன்பாய்ஸ்முதல்வன்விசில்கன்னத்தில் முத்தமிட்டால்சிவாஜி the பாஸ் சில சுவையான தகவல்கள்* இறந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் முன்னால் ஜனாதிபதி அப்தூல் கலாமும் ஒன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.*சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. சுஜாதா திரைக்கதை எழுதிய கடைசி திரைப்படம் சிவாஜிசுஜாதாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லத் தேவையில்லை. இப்போதும் சிவாஜி படத்தில் எழுதிய வரி ஒன்று ஞாபகம் வருகிறது "சாகும் நாள் தெரிந்து போய்விட்டால் வாழும் நாள் நரகமாகிவிடும் "மற்றவர்களுக்கு எப்படியோ என்னைப்பொறுத்தவரையில் அவர் ஓர் சகாப்தம்வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதற்கமைய போய் வாருங்கள் சுஜாதா! போய் வாருங்கள் சுஜாதா அறிந்திராத உலகிற்கு ! நன்றி :- WIKIPEDIA

சுஜாதா அஞ்சலி கூட்டம் - பெங்களூர்-31.03.2008


சுஜாதா அஞ்சலி கூட்டம் - பெங்களூர்-31.03.2008
பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் சுஜாதா நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது. நானும் ஒரு சுஜாதா வாசகனாக என் நண்பருடன் சென்றிருந்தேன். கூட்டம் முதலில் கப்பன் பூங்காவில் என்று சொன்னார்கள், ஆனால் திடீர் என்று ஞானோதயம் வந்து தமிழ்ச் சங்கத்தில் என்று அறிவித்தார்கள். கொசுக்கடிக்கு இந்த இடம் தேவலாம் என்று போனேன்.
திண்ணையில் அறிவிப்பு மாறிக்கொண்டே இருக்க, கூட்டம் மாலை 4:00லா, 4:30மணியா என்ற குழப்பம் இருந்துக்கொண்டிருக்க. எதுக்கும் போகும் முன் திண்ணையில் ஒரு தடவை பார்க்கலாம் என்று பார்த்தால் 5:00மணி என்று போட்டிருந்தது. 4:45 மணிக்கு போன போது
'பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்' வெளியில் சாக்பீஸில் 'சுஜாதா நினைவு அஞ்சலி கூட்டம்' மாலை 5:30 என்று பலகையில் எழுதியிருந்தார்கள்.
பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் 'அல்சூர் லேக்' பக்கத்தில் இருக்கிறது. நான் பலபேரிடம் விலாசம் கேட்ட போது, எல்லோரும் இப்படி தான் சொன்னார்கள். லேக் பக்கத்தில் தமிழ்ச் சங்கம் என்று கேட்டால் யாராவது குளத்தில் தள்ளிவிடும் அபாயம் இருப்பதால் முகவரியை கொடுக்கிறேன்: சரியான முகவரி #59, அண்ணாசாமி முதலியார் தெரு.
5:35மணி ஆகியிருந்தது. யாரோ ஒருவர் சுஜாதா படத்தை கொண்டு வந்து மாலை போட்டு, பக்கத்தில் இரண்டு பூத்தொட்டிகளை வைத்தார். ஒருவர் அவர் புத்தகங்களை எடுத்து வந்து மேடையில் அடுக்கினார். இருபது வருஷம் கழித்து சுஜாதா இறந்த செய்தி கேட்டு நான் சென்னை வந்தேன் என்று ஆதாரத்துடன் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.
வானம் லேசாக மூடியிருந்தது. மழை வரும் அறிகுறி தென்பட்டது. 5:45மணி ஆனது கூட்டம் நடக்குமா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. ஒருவர் தமிழ்ச் சங்க நிர்வாகியிடம் போய் மணி 5:45 ஆகிவிட்டதே கூட்டத்தை ஆரம்பிக்கலாமா?" என்று கேட்டவுடன். கொஞ்சம் டென்ஷனாகி "தலைவர் இன்னும் வரவில்லையே ? தலைவர் வராமல் கூட்டமா ?' தமிழ்ச் சங்கத்திற்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது தெரியுமா?" என்று பதில் சொன்னார்.
பாரம்பரியம் மிக்க இந்த தமிழ்ச் சங்கத்தின் தலைவரோ உபதலைவரோ ஒருவர் கோட் சூட் டையுடன் அப்போது வந்தார்.( நான் கிளம்பும் போது, என் மனைவி "தமிழ்ச் சங்கத்துக்கு போறீங்க ஒரு வேட்டியை கட்டிக்கொண்டு போக கூடாதா? இப்படி ஜீன்ஸ் போட்டுக்கொண்டு போறீங்களே ?" என்று சொன்னது நினைவுக்கு வந்தது )
வந்த தலைவர், மற்றும் நிர்வாகிகள் (தொண்டர்கள் என்றும் சொல்லலாம்) எல்லோரும் முதல் மாடிக்கு சென்றுவிட்டார்கள். காப்பி குடிக்க.
கீழே அரங்கில் மாலை போட்ட சுஜாதாவும், என்னை போன்ற சுஜாதா விஸ்வாசிகளும் தனியாக பேசிக்கொண்டிருந்தோம். மணி 6:00 ஆகியிருந்தது. ராகுகாலம் கூட கிடையாது ஏன் இவ்வளவு லேட் என்று சிலர் மேலே போய் அவர்களை அழைத்து வந்தார்கள். கூட்டம் சரியாக 6:20 க்கு ஆரம்பம் ஆனது.
பேச்சை ஆரம்பித்தவர் "கப்பன் பூங்காவிற்கு பதில் தமிழ்ச் சங்கத்திலேயே நினைவு அஞ்சலி விழாவை கொண்டாட முடிவு செய்தோம்" என்று தன் பேச்சை ஆரம்பித்தார்.
சுஜாதா பற்றி கொஞ்சம் சொல்லிவிட்டு கமல், ரஜினி, ஷ்ரேயா போன்றவர்களை பற்றி விலாவாரியாக சொல்லிவிட்டு. சுஜாதாவிற்கு அஞ்சலி என்று முடித்தார்கள். மணி 7:25 ஆகியிருந்தது. என்னை 'சுருக்கமாக' பேச அழைத்தார்கள். நான் நன்றி, வணக்கத்துக்கு இடையில் 'சுஜாதா, சுஜாதா' என்று இரண்டு முறை சொல்லிவிட்டு வந்து உட்கார்ந்தேன். கூட்டம் முடிந்ததும், தமிழ்ச் சங்கத்தில் திடீர் என்று நல்ல கூட்டம். என்ன என்று பார்த்தால் வெளியில் இடி மின்னலுடன் மழை. மழைக்கு நிறைய பேர் ஒதுங்கினார்கள்.
ஒதுங்கியவர் ஒருவர் யாரிடமோ "இங்கு என்ன சார் இன்னிக்கு டிராமாவா?" என்றார்
வெளியே போகும் போது, துண்டு காகிதத்தை ஒருவர் என்னிடம் கொடுத்தார். ஞாயிறு அன்று நூல் வெளியீடு, மற்றும் தொல்காப்பியர் கருத்தரங்கம், மாலை 3:00 மணி என்று போட்டிருந்தது. திங்கட்கிழமை போனால் சரியாக இருக்கும் என்று எண்ணினேன்.
பிகு: 'பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்', ''பெங்களூர் தமிழ் சங்கம்' எது சரி என்று தெரியலை. 'பெங்ளூர்த் தமிழ்ச் சங்கம்' என்று தான் எல்லா இடங்களிலும் எழுதியிருந்தது.

Comments:

1.தமிழ்நெறியன்
"பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்"?
நன்றாகத்தானிருக்கிறது.
"தமிழர்களுக்கிடையே ஒற்றுமை மிகுதியாக இல்லை. அதனால், ஒற்றாவது மிகுதியாகட்டும். பெயரிலாவது. பெயரளவிலாவது" என்று நினைத்திருப்பார்கள்.
உலகில் எல்லாமே பெயருக்குத்தான் நடக்கிறது. பெயரளவில் நடக்கிறது.
Don't sweat the small stuff படித்திருப்பார்கள். தமிழர்கள் அல்லவா.
2
அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த அபாக்கியசாலிகளில் நானும் ஒருவன்.
சுஜாதா 20 வருடங்கள் வாழ்ந்து, தமிழ் இலக்கிய சாதனை படைத்த பெங்களூரில் இந்தக் கூட்டத்திற்கு சரியாக 30 பேர் வந்திருந்தனர் (மேடையில் இருந்த தலைவர் வகையறாக்கள், எடுபிடிகள், பார்வையாளர்கள் எல்லாம் சேர்த்து - முடியும்போது எண்ணியது).
தேசிகன், அங்கு உங்களது 5 நிமிட உரை தான் சுஜாதாவுக்கு உண்மையான, ஆத்மார்த்தமான அஞ்சலி என்று சொல்லலாம். சுஜாதாவின் பூத உடலை தகனம் செய்கையில் அவரது வாசகரான சுடுகாட்டுப் பணியாளர் ஒருவர், சுஜாதாவின் இறுதி வழியனுப்புதலில் தன் பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக அவரது ஷிஃப்டை மாற்றிக் கொண்டு வந்தார், கண்ணீருடன் தன் பணியை செய்தார் என்று நீங்கள் கூறியது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. "ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர், ஒரு வெட்டியான் இருவர் மனத்தையும் கவர்ந்த எழுத்தாளர் - அது தான் சுஜாதா" என்று நீங்கள் முடித்தது நெஞ்சைத் தொட்டது.
அதற்கு முன் பேசிய அனைவரும் (அந்த ஜிப்பா அணிந்த பேராசிரியர் தவிர்த்து) இந்த அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பொருத்தமில்லாத விஷயங்களையும் பேசியது அங்கு இருந்த சொற்ப சுஜாதா வாசகர்களை வ்ருத்தியிருக்கும் என்பது நிச்சயம். குறிப்பாக கட்டைத் தொண்டையில் நீண்ட நேரம் பேசிய ஆள் ஒரு மாபெரும் இலக்கியகர்த்தாவை, மக்கள் மனம் கவர்ந்த ஒரு எழுத்தாளரைப் பற்றிப் பேசுகிறோம் என்ற பிரக்ஞை இல்லாமல், ஏதோ தனக்குத் தெரிந்த யாரோ ஒருவரைப் பற்றிச் சொல்வது போலவே கடைசி வரையும் பேசிக் கொண்டிருந்தது அபஸ்வரம்.
நன்றி.

inspired by சதீஷ் — #5


இந்த எழவுக்காகத்தான் எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊர் தமிழ்ச் சங்கம் இருக்கும் பக்கமே தலைவைத்துப் படுப்பதில்லை.
ஆனாலும் உங்களுக்கு அசாத்திய பொறுமை! எல்லாவற்றையும் (சுஜாதாவுக்காகத்) தாங்கிக்கொண்டு வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!
இப்பதிவை அவர்களுக்கு அனுப்பினீர்களா?



3] from: CHANDRAMOWLEESWARAN
சுஜாதா அளவுக்கு பெங்களூரை வர்ணித்தவர் யாரும் இல்லை என்பது உலகம் அறிந்த உண்மை. அவரது படைப்புகளில் பெரும்பான்மை அவர் அங்கு வசித்த போது எழுதப்பட்டவை என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள் அந்த ஊர் தமிழர்கள். அவர் பாணியிலேயே "பசித்த புலி தின்னட்டும்" என சொல்லத்தோன்றுகிறது. ஆனால் யாரையும் திட்டி எழுதி அவர் நம்மை பழக்க்கவில்லையே. போகட்டும் விடுங்கள் . அவர் கற்பூரம் !! இப்போது திருநாட்டில் அரங்கன் முன்பு சுடரும் கற்பூரம் !! நமக்கு என்றும் மனங்களில் சுடரான கற்பூரம் !!!!
reply to this comment Tuesday, 18.03.08, 11:15:21
show comment in his contextreset
4.from:
revathi.narasimhan
அவரை முற்றும் அறிந்தவர், தெரிந்தவர் என்று யாரும் உணரவில்லை. உணராதவர்கள் அவரைப் பற்றிப் பேசித்தான் என்ன ஆகப் போகிறது.விடுங்கள். அவருக்கு இதெல்லாம் தேவை இல்லை என்றுதான் சட்டேன்று கிளம்பி விட்டாற்.
reply to this comment
show comment in his contextreset
[
5] from: உண்மைத்தமிழன்

இப்போதெல்லாம் அமைப்புகள் எல்லாவற்றிலும் அரசியல் தங்குத்தடையின்றி ஊடுறுவியிருக்கின்றன.
விட்டுத் தள்ளுங்கள்.. அழைப்புக்கிணங்கி வாத்தியாரின் பெயரை பதிவு செய்துவந்து விட்டீர்கள்.
இதுவே போதும்.
நம் வாத்தியாருக்கு புத்தகங்களே சாட்சி.. குரல் ஓட்டுத் தேவையில்லை..
அவருடைய பெயர் சாசுவதம் பெற்றது.. அழியாப் புகழ் பெற்றவருக்கு வேறு புகழ் தேவையில்லை..
தாங்கிக் கொண்ட தங்களுக்கும் நன்றிகள்..
reply to this comment Tuesday, 18.03.08, 12:06:34
show comment in his contextreset
[
6] from: Ravi

this is quite embarasing, good i didnt happen to attend this...
~Ravi
reply to this comment Wednesday, 19.03.08, 15:36:16
show comment in his contextreset
[
7] from: vedhagopalan
Your narration about the condolence meeting was really humorous. this irony is the real Anjali for our great master!
reply to this comment Friday, 21.03.08, 01:14:13
show comment in his contextreset
[
8] from: Ramasundaram
we are pained to read the article "akanda pajanai" that has come in this week Thinnai (
http://www.desikan.com/blogcms/url).
It seems that only your speach has given some satisfaction to the visitors of the meeting. You have gone there as hanuman would do to a ramayana sangirthan, and have saved the face of the great writer.
reply to this comment Friday, 21.03.08, 20:31:35
show comment in his contextreset
[
9] from: Rajagopal,


Neenda natkalaga bangalore-il vasikkum Sujatha vin Vasganagiya enakku andha Anjali Meeting patri theriyamal poi vittadhu.Therinthirunthal andha koottathirku vandha 31 vadhu nabaraga irundhiruppen. Enakku andha bakkiyam kidaikkavillai endru varundhugiren.


எளிமையான ஜீனியஸ் சுஜாதா- ஷங்கர்



மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஒரு எளிமையான ஜீனியஸ். அவரது மறைவை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை என்று இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். சுஜாதா மறைவால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர் ஷங்கர்தான். அவரது பெரும்பாலான படங்களுக்கு சுஜாதாதான் வசனம் எழுதியிருக்கிறார்.

தொழில் தவிர்த்து, இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். சுஜாதாவை தனது தந்தை ஸ்தானத்தில் தான் வைத்திருந்தார் ஷங்கர். சுஜாதாவின் மறைவினால் பெரிதும் கலங்கியுள்ள ஷங்கர், அவரை எளிமையான ஜீனியஸ் என புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து ஷங்கர் வெளியிட்டுள்ள செய்தியில், எழுத்தாளர் சுஜாதா ஒரு எளிமையான ஜீனியஸ், எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய இழப்பு எழுத்துலகத்துக்கு மட்டுமில்லை திரை உலகிற்கும் தான். அவருடன் இந்தியன் படத்திலிருந்து, முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி என்று நான்கு படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.

இந்த படங்களில் அவர் வசனம் எழுதியிருந்தாலும் அவருக்கு மிகவும் பொருத்தமான தீனி போடும் படம் ரோபோ. என்னுடைய கேரியரில் அவருடைய பெஸ்ட் வொர்க் இந்த படத்தில் இருக்கும் என்று நினைத்திருந்தேன். அவரும் எனக்கு இதுதான் ரொம்ப பிடித்தமான புராஜெக்ட் என்று சொல்வார். இந்த படம் முடிவதற்குள்ளாகவே எங்களை விட்டு மறைந்து விட்டார். ஒவ்வொரு படத்துக்காகவும் டிஸ்கஷனுக்காக பத்து நாட்கள் வெளியூர் போவோம்.

அந்த இனிமையான நாட்களை மறக்க முடியாது. கதை போக்கையும், அதிலுள்ள சிக்கல்களையும், குறைபாடுகளையும் மிக அழகாக அலசுவார். அவருடைய சிந்தனை எப்பொழுதும் ஒரு கல்லூரி மாணவன் மாதிரி இளமையாக இருக்கும். எவ்வளவு பெரிய விஷயத்தையும் சுருக்கமாகவும், நவீனமாகவும், சுவாரசியமானதாகவும் எழுதிக்கூடியவர். சமயத்தில் நண்பராகவும், சமயத்தில் ஒரு ஆசிரியராகவும் நான் அவரை உணர்வேன்.


அவருக்கு பணத்தாசை கிடையாது. சம்பளம் கேட்கவே தெரியாதவர். சம்பளம் பற்றிப் பேசினால், 'எதாவது கொடுங்க' என்பார். ஆசைகள் ஏதும் இல்லாத எளிய மனம் கொண்டவர். யாரையும் காயப்படுத்த மாட்டார். எல்லோரையும் மதிக்கும் குணமுடையவர். திறமை எங்கிருந்தாலும் கண்டெடுத்து பத்திரிகைகள் வாயிலாக அவர்களை அடையாளம் காட்டுவார். எதற்கும் கலங்க மாட்டார், எதற்கும் உணர்ச்சி வசப்பட மாட்டார். பாசாங்கு இல்லாதவர். அவர் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்துகொள்ளும் போதுகூட அவர் அதை ஒரு பெரிய விஷயமாக கருதவில்லை. கூல் அண்டு டேக் இட் ஈசி என்பார்.


எனக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டு அவருக்கு போன் பண்ணினால் அதற்கு அவர் மிகச் சுலபமாக தீர்வு சொல்லி நொடியில் தீர்த்து விடுவார். அதற்கு நன்றி சொன்னால், எதற்கு நன்றியெல்லாம் நீ என் மகன் மாதிரி என்பார். இந்த இழப்பு அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல எனக்கும் தான்... இதை என்னால் அவரது பாணியில் 'கூலாகவோ ஈசியாகவோ' எடுத்துக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் ஷங்கர்.

ஹாப்பி பர்த்டே சுஜாதா 70வது பிறந்த நாள்





ஹாப்பி பர்த்டே சுஜாதா ! 70வது பிறந்த நாள்
சுஜாதா எழுதிய எல்லாவற்றையும் படித்து அனுபவித்திருக்கிறேன். அந்த அனுபவம் குதூகலம், விளையாட்டு, பக்தி, உற்சாகம், துக்கம் என கலவையானது. ஆனால் நேற்று ஆனந்த விகடன் 'கற்றதும் பெற்றதும்'ல் சுஜாதா எழுதிய இந்த கட்டுரை என்னை கொஞ்சம் டிஸ்டர்ப் செய்தது. முதுமை ஒரு தவிர்க்க இயலாத கட்டளை என்ற போதிலும் அதை எதிர்கொள்வது ஒரு கலை. வயோகதிகத்தின் அச்சுறுத்தும் இருண்ட கனவுகளை அங்கதமாக மாற்றி அதனோடு விளையாடுவதற்கு வாழ்க்கையின்மீதான ஒரு பெரிய தரிசனமும் சுய வெளிச்சமும் இருந்தால்தான் சாத்தியம். சுஜாதாவின் இந்தக் கட்டுரை அந்த வெளிச்சத்தை கொஞ்ச நேரம் நம் மனங்களில் ஏற்றுகிறது. அவர் இந்தக் கட்டுரையில் கூறியிருக்கும் ஞாபக மறதி உட்பட பல symptoms எனக்கு இந்த வயதிலியே இருப்பதை நினைத்தால் கொஞ்சம் பயமாகவும் இருக்கிறதுஇன்று தனது 70வது பிறந்த நாள் காணும் திரு.சுஜாதாவிற்கு என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துக்கள். அவரை ஸ்ரீரங்கநாதர் நல்ல உடல் நலத்துடன் வைத்துக்கொள்ள பிரார்த்திக்கிறேன். நான் சுஜாதாவின் தீவிர வாசகன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன்.


இந்த வார 'கற்றதும் பெற்றதும்'ல் சுஜாதா...

மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். "யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார். நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன். "எதுக்குப்பா?" "தொடுங்களேன்!" சற்று வியப்புடன் தொட்டார். "மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார். "ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..." "இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார். "உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன். அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?" "ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!" என்றேன்.

தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை.

‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை. மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது.

ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்! டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.

மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன.

ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்குÕ என்றும் எண்ணுவேன்.

எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!

சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!". ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது.

நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை.

பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன். இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன்.

சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது. ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).

இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.

தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.

அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று. நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது.

பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான்.

வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள்.

மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!

நன்றி: ஆனந்த விகடன்



ஹாப்பி பர்த்டே சுஜாதா ! பிடிச்சிருக்கா ? பிடித்திருந்தால் '+' பிடிக்காவிட்டால் '-' என்று ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து மற்றவருக்கு படிக்கவோ படிக்காமலிருக்கவோ உதவுங்கள். பரிந்துரைக்க Starsயை கிளிக் பண்ணுங்க..நன்றி!
?



Works best if you Comments:
வணக்கம் . அன்னிக்கு மூக்கு சுந்தர் பதிவுள்ள எழுதியிருந்ததால, ஆ.வி போய் படித்தேன். உண்மையில் படிக்கும்போது மிகுந்த கலக்கமாய் இருந்தது. சாருக்கு கண்ணில் பிரச்னை ஏற்பட்டபோதும், இதயநோய் ஏற்பட்டபோதும் அவர் சிரித்தபடி எழுதியிருந்தாலும், என் மனது வருத்தப்பட்டது உண்மை. ஆனாலும், அப்போது விட இந்த வார கற்றதும், பெற்றதும் கலங்கடித்து விட்டது. ஒரு மினி சுயசரிதை போன்ற வடிவமும் காரணமாய் இருக்கலாம். அது உங்களை disturb பண்ணியதில் ஆச்சரியமில்லை.சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... உடல்நலப்பிரச்னை அதிகமில்லாமல் நீடுழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்.



தன்னுடைய கவலையைக் கூட சுவைபட சொல்வது ஒரு கலை. அது சுஜாதா அவர்களால் தான் முடியும். அவர் நீடூழி வாழ்ந்து, மேன்மேலும் பற்பல எழுத்தாளர்களின் மானசீக குருவாகத் திகழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.அன்புடன்,'சுபமூகா'





‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை. >>உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!நாளை இருப்போமா என்பது நம் கையில் இல்லை என்பதை எத்தனை தெளிவாக சொல்லி இருக்கிறார்!.அவரை வாழ்த்த வயது போதாது, அவர் நல்லாரோக்கியத்துடன்,நலமே வாழ ராஜராஜேஸ்வரிஅருள்புரிய வேண்டுகிறேன்.அற்புதமான அந்த எழுபது வயது இளைஞரின் ஆசிகள் எங்களுக்கு எப்போதும் கிடைக்கவேண்டும்.அன்புடன்(ரங்க)மீனா
நான் சுஜாதாவின் தீவிர வாசகன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன். //நானும்.எனது வாழ்த்துக்களையும் சுஜாதா அவர்களிடம் சேர்ப்பிக்கவும்.விகடன் கட்டுரை மிகவும் நெகிழ வைத்தது. அவரது நல்ல நெஞ்சுக்கு எவ்விதக் குறையும் வாரா. 'உமக்கென்ன குறைச்சல் நீர் ஒரு ராஜா வந்தால் வரட்டும் முதுமை, வந்தால் வரட்டும் முதுமை' என்று எம் எஸ் விஸ்வநாதன் குரலில் பாடத் தோன்றுகிறது. நோய்கள் நீங்கி, இன்னும் பல நூற்றாண்டு ஆரொக்கியமாக வாழ்ந்து, உன்னதப் படைப்புக்களைத் தொடர்ந்து படைக்க எனது அன்பான வாழ்த்துக்கள். பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்தும் அன்பு நெஞ்சம்ச.திருமலை


By Anonymous, at Thu May 05, 07:03:00 AM IST
விகடன் கட்டுரை படிப்பது ஒரு மினி சுயசர்தை படிப்பது போலிருந்தது என்பது உண்மைதான்.கட்டுரை படித்ததும் நானும் பெரிதும் பாதிக்கப்பட்டேன், இங்கு எழுத நினைத்தேன், பிரகாசும் தேசிகரும் போட்டுவிட்டார்கள்.நன்றி.நல்ல உடல் நலத்துடன் ரங்கராஜன் அய்யா அவர்கள், நீண்ட நாள் வாழ இறை அருள் புரியட்டும்!எம்.கே


By எம்.கே.குமார், at Thu May 05, 07:21:00 AM IST
நானும் அவரின் தீவிர வாசகன்! அன்னாருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களும்!


By Moorthi, at Thu May 05, 08:05:00 AM IST
Desikan,today i morning i read the article. amma was reading it two days and recommended me to read this weeks katrathum petrathum in vikatan. there are lots of things that is beyond human understanding. if all the information all available for everyone at some place learning will stop. then it is all about perceiving those information more than coming out with new things. i was reading angels and demons last week and got a new perspective about god. as per the author dan brown science is nothing but god. god has created so many things for you and whenever you learn something you are nearing god. the time when you see both science and god are complementing each other you are starting learning more. ofcourse this is a perspective of one of the character in the book.one more addition the late age memory loss is something called as dementia. the definition of dementia is gradual progressive mental impariment. alzheimer is one form of dementia. nearly 65% of people are suffering from this kind of dementia. this is a compromise that people had to do for their long life. lots of activities are happening on this area in nimhans @ bangalore. as sujatha mentioned live for today.


By kicha, at Thu May 05, 10:51:00 AM IST
Dear Desikan,Thanks for the article. I have one similarity with Sujatha!! Guess What???My Date of Birth is also 13-April and his too. But Actually my DOB is 13-October.. changed due to some reason in school. Apart from this he is a great human being. He came to my colleage during my 2 Year, he was talking about Video Compressiong, Huffman coding etc.. i was thrilled to hear that. I wanted to meet him in person and get an autograph,but i couldn't do on that day. Everyone in my famil likes his stories. I have bought all the Katrathum Petrathu,En Etharku eppadi series from Ananda Vikatan. He is truly a amazing gift to Tamil People and Cinema.Wishing him a great Day and God bless him.Regards,Subbu


By Anonymous, at Thu May 05, 11:29:00 AM IST
என் தாத்தாவின் ஞாபகம் வருகிறது. அவர் இப்படித்தான் ஒரு ஆங்கில வார்த்தையைத் தேடிப் பிடித்துக்கொண்டிருந்தார். "சண்டை போடுறதுக்கு இதைச் சொல்வாங்க" என்று தேடினார். ஞாபகத்திலிருந்து எப்படியும் எடுத்துவிடமுடியும் என்று நம்பித் தேடினார். கடைசியில் சில மணி நேரங்களுக்குப் பிறகு "quarell" என்றார், அதைக் கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்தில். "இதைக் கண்டுபிடிக்கத் தெரியலை?" என்றேன். "நான் நினைச்சதை உன்னாலயும்தான் கண்டு பிடிக்கமுடியலை" என்றார்.எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியானவர்கள் போல, எல்லா வயதானவர்களும் ஒரே மாதிரியே. சமீபத்தில் ஜெயகாந்தனைப் பார்த்தபோது, அருகில் என் தாத்தாவைப் பார்ப்பது போலவே உணர்ந்தேன். சுஜாதாவின் எழுத்தில் கூட அதே "தாத்தாமை".இந்தச் சப்பை கமெண்ட்டைப் போடுவதற்குள் தாவு தீர்ந்துவிட்டது. தேசிகனின் வலைப்பதிவு ஒரு "நிலை"க்கு வருவதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது. இதே பிரச்சினை பத்ரியின் வலைப்பதிவிலும் இருக்கிறது. ஏதாவது செய்யவும், எழுதாமலிருப்பதைத் தவிர! :-)அன்புடன்ஹரன்பிரசன்னா


By Haranprasanna, at Thu May 05, 01:46:00 PM IST
DesikanConvey my wishes to Sujatha"Now I know why he did not attend my marriage"BTW what film he is curremtly working onDittu


By Dittu, at Sat May 07, 08:13:00 AM IST
Dear DesikanU will become a cloned version of Sujatha one day.best wishesNanu


By Narayanan, at Sun May 08, 11:04:00 AM IST
the post as well as the responses are as sentimental and sensible as most tamil tv serials are.


By Anonymous, at Mon May 09, 03:08:00 AM IST


எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியானவர்கள் போல, எல்லா வயதானவர்களும் ஒரே மாதிரியே

A COLOSSUS by the name of SUJATHA(posted on 3 MAY 2005


மீள் பதிவு (posted on 3 MAY 2005)
********************************
இந்த வார விகடனில், சுஜாதா அவர்களின் "கற்றதும் பெற்றதும்" மிக மிக உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட ஒன்று. வயதானால் ஏற்படும் உடல்/மன/குண மாற்றங்களை தனது அசத்தலான பாணியில் நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். அவர் உடலுக்கு தான் வயதே ஒழிய மனம் இன்னும் இளமையாக இருப்பதாகவே தோன்றுகிறது.


அதற்கு உதாரணம், அவரைப் போன்ற இன்னொரு தாத்தாவின் வயதை கண்டுபிடிக்க அவர் மேற்கொள்ளும் சாகசம் :-) (பார்க்க, தேசிகனின் ஹாப்பி பர்த்டே சுஜாதா
!)


//எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
//

யதார்த்தத்தை எவ்வளவு நெகிழ்ச்சியாக வெளிப்படுத்தியிருக்கிறார்! எனக்கென்னவோ, அவர் பல ஆண்டுகளாக, அயற்சியில்லாமல் தனது உடலையும், மூளையையும் வருத்திக் கொண்டதன் விளைவாகவே (அதனால் பலருக்கு அவரது எழுத்துக்கள் வாயிலாக மிகுந்த சந்தோஷம் கிடைத்தது என்றாலும்) தற்போது பலவித உடல் நலக்குறைவுகளால் கஷ்டப்படுகிறார் என்று தோன்றுகிறது. அவர் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்.


//கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது.
//

NOSTALGIA போன்ற ஒரு சுகமான உணர்வு உலகத்தில் கிடையாது என்று பறைசாற்றுபவை அவரது ஸ்ரீரங்கத்துக் கதைகள்.

ஸ்ரீரங்கத்து கதைகளை (முழுத்தொகுப்பாக) மறுபடியும் படித்தபோது ழரு பிரமிப்பு லற்பட்டது! ஒவ்வொரு கதையும் ஒரு நல்முத்து! அவற்றை படிக்கையில், திரு.R.K.நாராயணன் அவர்களின் "Malgudi Days" ஏற்படுத்திய அதே அளவு தாக்கத்தையும், ஒரு வித சுகமான "Nostalgic" உணர்வுகளையும் அனுபவிக்க முடிந்தது. அந்தக்காலத்து மிக அழகான ஸ்ரீரங்கத்தையும், மக்களையும், பெருமாளையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவற்றை படித்து முடிக்கும் வரை, அவரது தேர்ந்த, unique "கதை சொல்லும் பாணி" என்ற கயிற்றினால் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார்!!

குறிப்பாக, "அரசு பகுத்தறிவுப் பாசறை" ஓரு "Real Classic"! Jeffrey Archer-இன் பாணியை திரு.சுஜாதா மிக அருமையாக தமிழில் கையாண்டிருக்கிறார். எவரும் எதிர்பார்க்காத ஓரு முடிவு தான் அக்கதையின் சிறப்பு! அடுத்ததாக, "மாஞ்சு" என்ற கதை, உள்ளத்தை உருக்கி விடுகிறது. "மறு" என்ற கதையில் வரும் நிகழ்ச்சிகளை உண்மையில் நடந்ததாகத் தான் நினைக்கத் தோன்றுகிறது!!


//சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!".
//

எங்கேயோ படித்திருக்கிறேன். ஒரு பெரிய தத்துவ மேதை (நாத்திகர்) இறக்கும் தருவாயில், தனது சீடர்களை அழைத்து, "நான் இத்தனை நாள் கடவுள் இல்லை என்று சொல்லி வந்ததை மட்டும் கொள்ளாமல், நீங்கள் உங்கள் வழியில் அது உண்மையா என்று ஆராய வேண்டும்" என்றாராம். சுஜாதா சொல்லும் குழப்பங்கள் பலருக்கும் உள்ளன.


// நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).
//

எவ்வளவு எளிமையாகக் கூறி விட்டார்!


//இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.
//

அவர் கூறிய இந்த TOP TEN-இல் குறைந்தது 9 விடயங்கள் பொதுவாக எல்லா வயதினருக்கும் பொருந்தக் கூடியவையே!!! இளவயதினருக்கு பத்தாவது விஷயமாக 'பணத்தை'க் கூறலாம்!


//என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ரோஜா வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், அரவிந்த சாமியுடன் என்னை மண முடி! என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், பாலம் கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!
//

இதை வாசிக்கும்போது, அவரது சிறந்த கதைகளில் ஒன்றாக நான் கருதும் "பிரிவோம் சந்திப்போம்" பகுதி இரண்டின் கடைசி பத்தி (நியூயார்க் நகரை அற்புதமாக வர்ணித்து விட்டு, ஆனால் மதுமிதா தான் இல்லை என்று நாயகன் நினைப்பதாக முடித்திருப்பார்!) ஏற்படுத்திய அதே தாக்கம் உண்டானது!!!! அந்த தாக்கத்தின் (பல ஆண்டுகளுக்கு பின்னர்!) வெளிப்பாடு தான், என் மகளுக்கு "மதுமிதா" என்று பெயர் சூட்டியது!!!


அவரே ஒரு கட்டுரையில் எழுதியது போல 'இன்னுமொரு நூற்றாண்டிரும்' என்று அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி: ஆனந்த விகடன்

தமிழில் எப்படி எழுதுகின்றீர்கள்





தமிழில்..
அடிக்கடி என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி.நீங்கள் தமிழில் எப்படி எழுதுகின்றீர்கள்? நான் தமிழில் எழுத என்ன செய்ய
வேண்டும்?

பையர்பாக்ஸ் -ல் தமிழ் ஒழுங்காக தெரிய மாட்டேங்குதே என்ன செய்ய? போன்றன.

இங்கே என் விளக்கங்கள்.

நீங்கள் தமிழில் எப்படி எழுதுகின்றீர்கள்?

ஆரம்பத்தில் Kuralsoft எனும் அழகிய எளிய இலவச மென்பொருள் ஒன்றை தான் பயன்படுத்தி வந்தேன்.இதன் வழி நேராக Notepad-ல் தமிழில் தட்டச்சலாம் அல்லது நேராகவே பிளாகிலேயே தட்டச்சலாம்.பிரச்சனை இல்லாதிருந்து வந்தது. என்னநினைத்தார்களோ சமீபத்தில் அதற்கு விலையை குறித்து விட்டார்கள். தமிழில் எழுத இலவச மென்பொருள்கள் இன்னும் இருப்பதால் அவைகளுக்கு தாவ வேண்டி வந்தது.

இப்போது ஈகலப்பை எனும் மென்பொருளை பயன்படுத்துகின்றேன். இந்நேரத்தில் இம்மென்பொருளை இலவசமாய் வழங்கிவரும் தமிழா (Thamizha) குழுவுக்கு நன்றிகள் தெரிவித்துகொள்கின்றேன்.நான் (அதாவது நீங்கள்) தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்?நீங்களும் தமிழில் Notepad-லோ அல்லது Blog-கிலோ அல்லது Gmail-லிலோ தமிழில் எழுதலாம்.

நான் (அதாவது நீங்கள்) தமிழில் எழுத என்ன செய்ய வேண்டும்?நீங்களும் தமிழில் Notepad-லோ அல்லது Blog-கிலோ அல்லது Gmail-லிலோ தமிழில் எழுதலாம். முதலில் கீழ்கண்ட சுட்டியிலிருந்து eKalappaiஎனும் மென்பொருளை இறக்கம் செய்து கொள்ளுங்கள்

http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=5

பின் கீழ்கண்ட சுட்டியிலிருந்து கீபோர்டு Tamil unicode .kmx கோப்பை இறக்கம் செய்து அதை ஈகலப்பையில் பயன்படுத்துங்கள்

http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=13

குழப்பமாய் இருக்கிறதா? இதோ படிப்படியாக செய்முறை உங்களுக்காக..

1.eKalappai-யை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவவும்.

சும்மா Install-யை கிளிக் பண்ணி மற்ற எல்லா வற்றையும் பட்பட்டென கிளிக்கி செல்லவும்.

கீழே அந்த ஆரம்ப படம்.

2.eKalappai நிறுவி முடித்ததும் கீழே படத்தில் இடதுகோடியில் காண்பது போல புதிதாய் ஒரு ஐகான் (TavulteSoft Keyman 6.0) உங்கள் கணிணியில் வரும்.

3.அந்த ஐகானை வலது கிளிக்செய்து keyman configuration...-ஐ கிளிக்கவும்.

4.அதிலுள்ள Install Keyboard-யை கிளிக்கி ஏற்கனவே இறக்கம் செய்து வைத்துள்ள NewUniTamil.kmx கோப்பை நிறுவவும்

5.முடிவில் இப்போது மூன்று கீபோடுகள் இருக்கும். அதில் Tamil99UNI,Tamil99Tsc இரண்டிலும் உள்ள டிக் மார்க்கை நீக்கிவிடவும்.UniTamil மட்டும் டிக் இருக்கட்டும்.

6.இப்போது Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் நீங்கள் தமிழில் எழுத தயார். Notepad-யை திறந்து தமிழில் எழுதலாம்.

உதாரணமாய் அம்மா என்பதை ammaa எனவும் ஆசை என்பதை aasai எனவும் டைப்பவேண்டும். இதை Tamil Transliteration என்பார்கள்.

மீண்டும் Alt மற்றும் 2 கீகளை சேர்த்து அமுக்கினால் ஆங்கிலத்துக்கு போய் விடுவீர்கள்.பையர்பாக்ஸ் -ல் தமிழ் ஒழுங்காக தெரிய மாட்டேங்குதே என்ன செய்ய?

ஏற்கனவே நண்பர் சொல்லிய விளக்கத்தையே இங்கும் தருகின்றேன்.

பயர்பொஸ் உலாவியில் தான் தமிழ் யுனிகோட் பிரச்சனை உள்ளது. அதனை கீழ் கண்டவாறு சீர் செய்யலாம்

1.முதலில் windows XP with Service pack 2 இறுவட்டை CD Drive க்குள் போட்டுக்கொள்ளவும்.

பின்னர் க்ண்ட்ரோல் பனெலிற்கு போய் Regional & Language Options என்னும் ஐக்கனை கிளிக் பண்ணவும்.

2. அதில் language என்னும் Tab இனை கிளிக் பண்னவும்.

3.அதில் supplemental language supportஏனும் option இல் இரண்டு தெரிவுகள் இருக்கும்*. install files for complex scripts and right to left language (including Thai)*install files for east Asian languages

இதில் முதலாவதை தெரிவு செய்த பின்பு apply button ஐ சொடுக்கினால் வின்டோஸ் எக்ஸ்பி சீடியிலிருந்து தமிழ் யுனிகோட்டுக்கு தேவையான விபரங்களை தானாகவே அது பதிவு செய்து கொள்ளும். பின்பு கணினியை மீள ஆரம்பிக்கவும்.

அவ்வளவு தான்

ஸ்பைவேர்கள் தொல்லை

சிங்கப்பூரிலிருந்து நண்பர் சங்கர் ஸ்பைவேர்கள் தொல்லை தாங்க முடியவில்லை சார். உதவமுடியுமா? என கேட்டிருந்தார். விண்டோஸ் எக்ஸ்பியில் ஆரம்ப முதலே Windows Firewall இருப்பதாலும் அவ்வப்போது வெளிவரும் பாதுகாப்பு ஒட்டல்கள் (Security Patches) மற்றும் Service Pack-குகளை சமயத்துக்கு சமயம் நிறுவுவதாலும் இத்தகைய ஸ்பைவேர், மால்வேர் மற்றும் அட்வேர்களின் தொல்லைகள் இப்போது விண்டோஸ் கணிணிகளில் சிறிது தணிக்கப்பட்டிருக்கின்றது. அதையும் மீறி (கண்ட கண்ட வெப்சைட்கள் போய்) மாட்டிக்கொள்வோர் மைக்ரோசாப்டின் கீழ்கண்ட இரு இலவச மென்பொருள்களையும் முய்ன்று பார்க்கலாம்.Windows DefenderWindows Malicious Software Removal Toolகொடுமை என்னவெனில் கூகிள் தேடலில் மாட்டும் அநேக தன்னை ஆண்டிஸ்பைவேர் என சொல்லிக்கொள்ளும் மென்பொருள்கள் உண்மையில் மேலும் ஸ்பைவேர்களை உங்கள் கணினியில் விதைத்து இன்னும் சூழலை மோசமாக்குபவையாகவே உள்ளன. குறிப்பாக என்ன ஸ்பைவேர் உங்கள் கணிணியில் இருக்கிறதுவென கண்டறிந்து அதன் பெயரை தெரிந்து அதை நீக்க வழிமுறையைகளை இணையத்தில் தேடலாம். அதை விட்டு விட்டு எதாவது ஒரு இலவச ஆண்டிஸ்பைவேரை சும்மாவாகும் முயல்தல் நலமல்லவே.


அன்பர் சேஷகிரி எனக்கு மற்ற format-களில் உள்ள இசைக் கோப்புகளை MP3 format-ல் மாற்ற ஏதேனும் செயலி இருப்பின் (ஓசியில்தான்) ஒரு லிங்க் கொடுங்களேன் என கேட்டிருந்தார்.அதற்கு நண்பர் இளைய கவி அழகாக பதிலளித்திருந்தார்.தாங்கள் கீழ் கண்ட சுட்டியிலிருந்து அந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். Audacity.Product Home PageDirect Download Linkமேலும் இது open source முறையை சார்ந்தது என்பதால் தங்களால் இந்த மென்பொருளில் மாறுதலும் செய்ய இயலும்.(ஓசியில்தான்)நன்றி இளைய கவி!!Rajesh RV - "It takes me lot of manual efforts to download everything.... " என சலித்திருந்தார்.பல கோப்புகளை எளிதாய் ஒரே நேரத்தில் இறக்கம் செய்யவும் குறிப்பாய் esnips.com mp3 கோப்புகளை எளிதாய் இறக்கம் செய்யவும் http://www.internetdownloadmanager.com வழங்கும் டவுன்லோடு மேனேஜரை முயன்று பார்க்கவும். It works Great. After you install Internet Download Manager Make sure Go to Options>File types.Add mp3 file type. Make sure Internet Download Manager has integrated with your browser.Product Home PageDirect Download Link

அம்பலம் ஏறும் அந்தரங்கங்கள்


டிஜிட்டல் உலகில் எல்லாமே செம ஸ்பீடு. டிஜிட்டலைஸ்ட் ஆகிய நடிகையின் கவர்ச்சி படமாகட்டும் அல்லது ரகசிய கசமுசா வீடியோவாகட்டும் அல்லது டிஜிட்டலைஸ்ட் ஆகிய ஒரு மென்புத்தகமாகட்டும் நொடிப்பொழுதில் உலகெங்கும் விஷ காய்ச்சல் போல் இணையம் வழி பரவிவிடும். என்னத்தான் பாதுகாப்பு முறைகள் கடைபிடித்தாலும் கலிபோர்னிய காட்டு தீ போல் இவை பரவுகின்றன. உருவாக்குதல் தான் கடினம், காப்பி செய்ய சில நொடிப்பொழுதுகள் போதும். மில்லியன் டாலர்கள் செலவு செய்து ஆயிரக்கணக்கானோரின் உழைப்பில் வெளியாகும் வீடியோ கேம்கள், விலைமிக்க மின் பொருள்களின் கதையும் அதுதான்.ஏதோ ஒரு விபரீத ஆசையில் யாருக்கும் தெரியாமல் சிட்டி ஹாலின் மதிப்புமிக்க மேயர் ஆசனத்தில் தன் மனைவியை துளி கூட துணியின்றி அவரை அமரவைத்து படம் எடுத்து தன் வீட்டு கணிணியில் வைத்திருந்தார் ஒரு பிரிட்டன் நகர மேயர். தன் வீட்டு பசங்க வீட்டில் ஒரு பார்ட்டி வைக்க வெளியூர் சென்றிருந்தார் மேயர். அவர் பிள்ளைகளின் நண்பர்கள் மேயர் வீட்டு கணிணியில் விளையாட தவறுதலாய் சிக்கியது அந்த படம். எவ்வளவு நேரமாகும்? ஒரே கிளிக்கில் உலகெங்கும் பறந்தது அந்த ஜோடியின் அந்தரங்கம்.இப்படி படமாயும், வீடியோவாயும் மாட்டி நோந்து போனோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதில் புதிது இப்போது ஒலிவடிவம்.நண்பரிடம், நன்கு தெரிந்தவரிடம், காதலரிடம் தானே பேசுகிறேன் என்ற நினைப்பில் அந்தரங்கமாய் ஏதேதோ கிளுகிளுப்பாய் பேச அப்பேச்சுக்கள் முழுவதும் எதிர்முனை நபரால் பதிவு செய்யப்பட்டு MP3 ஒலி வடிவில் எடுக்கப்பட்டு இணையத்தில் உலவ விடப்பட்டால் எப்படி இருக்கும்?. டிஜிட்டல் உலகில் இது போன்றவை எளிதாய் சாத்தியம். வெளிவரும் செல்போன்கள் அனைத்துமே இது போன்ற வாய்ஸ் ரெக்கார்டிங் கொண்டிருப்பது ஒரு பயமுறுத்தும் செய்தி. "நேரில் காதுள் பேசு. போனில் அதுவும் பேசாதே" என புதுசாய் சொற்றொடர் உருவாக்கவேண்டியுள்ளது.அப்படியே எசகு பிசகாய் எதாவது ஆர்வக்கோளாரில் பேசினாலும் பேசும்போது கவனமாய் போனில் பேசவும். முக்கியமாய் "அது" போன்ற பேச்சுகளிடையே உங்கள் விலாசம், பெயர், மொபைல்நம்பர் போன்ற தகவல்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. இதை தெரிஞ்சு உசாராக
ஒரு சாம்பிள் தேவையா என்ன?

மின்சாரக் கனவு


முதலில் எங்கோ உருவாக்கப்பட்ட ஒலி அலைகளை கம்பியின்றி தொலை வானொலிகளுக்கு கடத்தி வெற்றி பெற்றார்கள். அதோடு ஒளியையும் சேர்த்து கலந்து இனிதாய் ஒலியும் ஒளியுமாய் தொலைகாட்சிகளுக்கு பின் கடத்தினார்கள்.இப்படி வெற்றிகரமாய் வயர்லெஸ் வழி ஒலியையும் ஒளியையும் கடத்தியாயிற்று.இப்படியே மின்சாரத்தையும் கம்பியின்றி கடத்த முடியுமா?அப்படி கடத்த முடிந்தால் எத்தனை மாற்றங்கள் உலகில் உருவாகும்.யூகிக்க கூட முடியாத ஒன்று.நெடுஞ்சாலைகளில் மைல்கணக்கில் வேகமாய் நம் கூடவே வரும் அந்த பருத்த மின்கம்பங்களும், கம்பிகளும் காணாமல் போய்விடும்.பாக்கெட்டில் இருக்கும் செல்போன் தானாய் வயர்லெஸ்ஸாய் சார்ஜ் ஆகிவிடும்.EB-க்கு தனியாய் காசு கட்டலாம்.மின்சார பேருந்துகள் ஓடிக்கொண்டே இருக்க வயர்லெஸ்ஸாய் அதற்கு கரண்ட் சப்ளை ஆகிக்கொண்டேயிருக்கும். இப்படி எல்லாமே மாறிப்போகும்.இதெல்லாம் சாத்தியமா? சமீபத்திய ஆய்வுகள் சில இவை சாத்தியம் என்கின்றன. இதை Wireless Electricity Power Transfer என்கின்றார்கள். மைக்ரோவேவ் ஓவன் மாதிரி ஒர் அறையை இந்த மின்னலைகளால் நிறைத்து அந்த அறை முழுவதும் மின்சாரத்தை கம்பியின்றி கடத்த முயன்றிருக்கிறார்கள். கி.பி 3000-த்தில் உங்களிடமுள்ள மின்கருவிகள் எல்லாம் வயர்கள் தொல்லைகள் எதுவும் இன்றி தானாய் இயங்க உலகமே இவ்வலைகளால் நிறைந்திருக்கலாம். யாருக்குத் தெரியும்?அட குடி தண்ணீரை கூட குழாயின்றி கடத்தலாம்ங்க. மேகம் டன் டன்னாய் வானில் தண்ணீரை குழாயின்றி கடத்த வில்லையா என்ன? :)ஆனால் ஒன்று. அதுவரை மாறி மாறி குண்டு வைத்து தகர்த்து தன்னை தானே கொல்லும் மனித ஜன்மம் தான் இருக்குமோ என்னவோ தெரியவில்லை
.

ஏய் தோழா முன்னால் வா






ஏய் தோழா! முன்னால் வாடா!
உயிர் காப்பான் தோழன் என முன்பு சொல்லி வைத்தார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியாது . ஆனால் கார்ப்பரேட் உலகில், வானளாவ உயர்ந்திருக்கும் அநேக கார்ப்பரேட்களுக்கு உயிர் கொடுத்தது தோழர்கள் தாம் என்றால் அது மிகையாகாது. இன்றைக்கு வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் அநேக கார்ப்பரேட்களின் ஆரம்ப காலத்தை திரும்பிப்பார்த்தால் இரு தோழர்களின் விடா முயற்சி இருந்திருக்கும்.மென்பொருள் ஜையண்ட் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவ பில்கேட்ஸுக்கு பால் ஆலன் உறுதுணையாய் இருந்தார். (Microsoft-Bill Gates and Paul Allen)நம் எல்லாருக்கும் அபிமானமான கூகுள் தேடு பொறியை உருவாக்கியதில் நண்பர்கள் லேரி பேஜ்க்கும் செர்ஜி ப்ரின்-குக்கும் பங்கு உண்டு. (Google-Larry Page and Sergey Brin)போர்ட்டல் மன்னன் யாகூ உருவாக ஜெர்ரி யாங்-கும் டேவிட் பிலோவும் கூட்டு சேர வேண்டியிருந்தது. (Yahoo-Jerry Yang and David Filo)டேட்டாபேஸ் புகழ் ஆரக்கிளை உருவாக்க லேரி எலிஸன், பாப் மைனர் என இருவர் தேவைப்பட்டார்கள். (Oracle-Larry Ellison and Bob Minor)சிறுசுகளை விளாசிக்கொண்டிருக்கும் இன்றைய ஹீரோ மைஸ்பேசை உருவாக்க தாமஸ் ஆண்டர்சனும் கிறிஸ்டோபர் டிவோல்பும் இணைந்து உழைத்தார்கள். (Myspace-Thomas Anderson and Christopher DeWolfe)இளசுகளை இசையால் மயக்கும் ஐபாட் உருவாக்கிய முண்ணணி நிறுவனமான ஆப்பிளை உருவாக்க ஸ்டீவ் ஜாப்ஸ்-க்கு ஆரம்பகாலத்தில் இன்னொரு ஸ்டீவ் துணையாய் உடனிருந்தார். (Apple-Steve Jobs and Steve Wozniak)ஏன்? வன்பொருள் வித்துவான் கார்டன் மூர்-க்கு கூட இண்டெலை நிறுவ நண்பன் ராபட் நோய்ஸ்-ன் உதவி தேவையாய் இருந்தது. (Intel-Gordon Moore and Robert Noyce)Single Founder கம்பெனிகளை விட இது மாதிரி Co-Founder சகிதம் வந்து கலக்கிய கம்பெனிகளே அதிகம் போல் தெரிகின்றது.தனியே, தன்னம் தனியே சாதிப்பதை விட இருவராய் அல்லது சிறு குழுவாய் அதிகம் சாதிக்கலாம் என இவர்கள் எடுத்துக்கூறுகின்றார்கள். நம்மூரில் கூட இன்போஸிஸ், சன் டிவி நெட்வொர்க் போன்ற பல வளர்ந்த நிறுவனங்களின் வரலாற்றை திருப்பி பார்த்தால் கடுமையாய் உழைத்த இருவர் அல்லது ஒரு குழு கண்ணில் அகப்படும்.அகத்தில் அசாத்தியமானதொரு கருவோடு, கொஞ்சம் கனவுகள், பெரிய தரிசனங்களுடன் அலைகின்றீர்களா?. நல்லதொரு தோழனைத் தேடுங்கள். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என சும்மாவா சொன்னார்கள்?

குக்கீஸ்-ன் இன்னொரு அவதாரம்



குக்கீஸ்-ன் இன்னொரு அவதாரம்
ஏதோ ஒரு தேவைக்காக ஒருஇணைய தளம் போகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். சில வாரங்கள் கழித்து மீண்டும் அதே இணைய தளம் போனால் அது "ஹாய் " என உங்கள் பெயர் சொல்லி கூப்பிட்டு வரவேற்பதோடு உங்களுக்கு பிடித்தமான சமாசாரங்களையும் பட்டியலிட்டு காட்டும். அமேசான்.காம் போன்ற தளங்கள் போனவர்கள் மிக தெளிவாகவே இதை உணரலாம். இதற்க்கு காரணம் பிரவுஸர் குக்கீஸ் (Browser Cookies). முதல் தடவை அத்தளம் போகும் போது அது உங்களை குறித்த முக்கிய தகவல்களை உங்கள் கணிணியில் ஒரு டெக்ஸ்ட் கோப்பில் இட்டுச் செல்லும். எனவே மறு முறை நீங்கள் அதே தளம்செல்லும் போது அது உங்களைப் பற்றி தெளிவாக சொல்லுகின்றது.பயனுள்ள தொழில்நுட்பமாக இது தெரிந்தாலும் சிலர் இதை தவறாக பயன் படுத்துவதால் பெரும்பாலோர் இந்த குக்கீகளை தாங்களாகவோ அல்லது சில பிரைவேஸி மென்பொருள் கொண்டோ அழித்து விடுவது உண்டு.இதற்கு டிமிக்கி கொடுக்க வந்துள்ளது ப்ளாஷ் குக்கீஸ் (Flash cookies-Local Shared Object (LSO)). சாதாரண பிரவுஸர் குக்கீ போலவே இது செயல் பட்டாலும் இந்த பிளாஷ் குக்கீகள் சில விஷயங்களில் சிறிது வேறுபட்டவை.முதலாவது உங்கள் கணிணியிலுள்ள அனைத்து பிரவுசர்களுக்கும் (Like Internet Exploere and Firefox in the same computer) ஒரே ஒரு குக்கீ மட்டுமே இருக்கும்.இரண்டாவது இக்குக்கீகளை பராமரிக்க ஆன்லைனில் செல்ல வேண்டும். பிரவுசர் செட்டிங்ஸ் உதவாது. இக்குக்கீகளை பிரவுசர் செட்டிங்ஸ் வழி அழிக்கவும் முடியாது. இதற்காகவே macromedia.com தளம் Adobe Flash Player settings Manager-யை ஆன்லைனில் வைத்துள்ளது.
View Adobe Flash Player settings ManagerTo View and delete Flash Cookies on your computer click hereView and delete Flash Cookiesஅல்லது கீழ்கண்ட இடத்தில் (ஹார்ட் டிரைவ்) உங்கள் கணிணியிலுள்ள பிளாஷ் குக்கீகளை பார்க்கலாம். அழிக்கலாம்.[systemdrive]:\Documents and Settings\[username]\Application Data\Macromedia\Flash Playerஅல்லது இருக்கவே இருக்கு Objection எனப்படும் Firefox extension to delete Flash Cookieshttp://objection.mozdev.org/சாதாரண பிரவுஸர் குக்கீகளை மட்டுமே அழித்துவிட்டு ஆகா தடயங்களை முற்றிலுமாய் அழித்து விட்டோம் என மெத்தனமாய் இனி இருக்க வேண்டாம். பிரைவசி பற்றி கவலைப்படுவோர் இனி பிளாஷ் குக்கீகளையும் அழித்து விடவேண்டும்.

வானத்திலே திருவிழா



சூரியனை ஓயாமல் சுற்றி வந்து கொண்டிருக்கும் சனி போன்ற இயற்கை கோள்கள் நம்மிலே, நம் செயல்பாட்டிலே எந்த வித தாக்கங்களை ஏற்ப்படுத்துகின்றனவென திட்டமாய் தெரியவில்லை. ஆனால் பூமியை ஓயாமல் சுற்றி வந்து கொண்டிருக்கும் மனிதனின் செயற்கை கோள்கள்(Satellite) நம்மிலே, நம் செயல்பாட்டிலே அதிக தாக்கங்களை ஏற்ப்படுத்தி வருகின்றது உண்மையே.உதாரணத்துக்கு சொல்லப்போனால் பூமி உருண்டையை இடைவிடாது சுற்றி வரும்
QuickBird, WorldView I போன்ற சேட்டலைட்கள் இன்றி கூகிள் எர்த் நமக்கு கிடைத்திருக்காது.Global Navigation Satellite System-ன் அந்த 24 சேட்டலைட்கள் இன்றி அமெரிக்க கார்களின் GPS வேலை செய்யாது.INSAT 4B இல்லாமல் சன் டிவியின் SunDTH நேரடி சேட்டலைட் வழி ஒளிபரப்பு சேவை நமக்கு கிடைத்திருக்காது.இப்படி டிவி சேனல்களை கேபிள்களின்றி நாடுமுழுதும் ஒளிபரப்ப ,சுற்று புற சீதோஷண நிலையை மணிக்கு மணி தெரிந்துகொள்ள , கடலடி இண்டர்நெட் கேபிள் வெட்டுண்டு போனாலும் அவசரத்துக்கு இணையம் மேய, நமக்கப்பாலுள்ள அண்டங்களை ரொம்ப அவசியமாய் ஆராய, எதிரியின் தந்திர நகர்வுகளை கவனமாய் நோட்டமிட இப்படி பல உதவிகள் இந்த செயற்கை கோள்களால்.அந்த காலத்து போர் தந்திரம் ஆரம்ப குறி எதிரியை புற உலகிலிருந்து துண்டிப்பது. சாலைகளை துண்டித்தல், பாலங்களை உடைத்தல், துறைமுகங்களை தகர்த்தல் இப்படி.வரும் கால போர் தந்திரமும் இப்படியே தான் இருக்கும். ஆனால் சற்று வித்தியாசமாக. பகைநாடு பற்றிய தகவல்களை அள்ளித்தரும் இந்த சேட்டலைட்களை நொறுக்குதல்.சீனா, ரஷ்யாவின் கருத்துப் படி ஆத்திர அவசரமேயில்லாமல் விண்வெளியில் சும்மா ஒடிக்கொண்டிருந்த ஒரு செயற்கைகோளை ஏவுகணை(SM-3) வைத்து சுட்டு அமெரிக்கா ஒரு வெற்றிகரமான ஸ்டார்வார் (Starwar) ஒத்திகை பார்த்துள்ளதாம்.இதையே தான் சீனாவும் (KillSat) முன்பு ஒருமுறை சாதித்துள்ளது.ஆக இன்னொரு யுத்தம் வந்தால் முதல் இலக்கு வானமாய் தான் இருக்குமோ...?சிறு வயதில் படித்த சிறுவர் பாடல் ஒன்று நினைவுக்கு வருகின்றது.வானத்திலே திருவிழாவழக்கமான ஒருவிழாஇடி இடிக்கும் மேகங்கள்இறங்கி வரும் தாளங்கள்மின்னல் ஒரு நாட்டியம்மேடை வான மண்டபம்தூரல் ஒரு தோரணம்தூய மழை காரணம்எட்டுத் திசை காற்றிலேஏக வெள்ளம் ஆற்றிலேதெருவெல்லாம் வெள்ளமேதிண்ணையோரம் செல்லுமேபார் முழுதும் வீட்டிலேபறவை கூட கூட்டிலேதவளை மட்டும் பாடுமேதண்ணீரிலே ஆடுமேஅகன்ற வெளி வேடிக்கைஆண்டு தோறும் வாடிக்கை" மனசு ஏனோ இலகுவாகி சில்லுனு இருக்குது.

உலக கரன்சிகளில் தமிழ்








உலக கரன்சிகளில் தமிழ்
இந்தியா தவிர இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மொரிஷியஸ் நாட்டு கரன்சிகளிலும் தமிழ் எழுத்துக்கள் இருக்கின்றனவாம்.இங்கே உங்கள் பார்வைக்காக அவற்றின் அணிவகுப்பு.


மேலே நீங்கள் காண்பது இலங்கை காசுவில்


நீங்கள் காண்பது சிங்கப்பூர் காசுவில்


நீங்கள் காண்பது இந்திய பணத்தில்


நீங்கள் காண்பது இலங்கை பணத்தில்


நீங்கள் காண்பது சிங்கப்பூர் பணத்தில்


தநீங்கள் காண்பது மொரிஷியஸ் பணத்தில்


தமிழ்Tamil script in World Currencies

மறைத்து வாழ வேண்டும்



மறைத்து வாழ வேண்டும்
மனிதமென்றாலே அது கடவுளும் சாத்தானும் சேர்ந்த கலவை தானே.அதனால் தானோ என்னவோ தனது "டிஸ்கவரி ஆப் இந்தியா" புத்தகத்தில் நேரு இப்படியாகச் சொன்னார். "இயற்கையின் வலிமையான விளையாட்டுக் கருவியாகவும், இந்தப் பெரிய அண்டங்களில் ஒரு பூமி உருண்டையில் ஒரு தூசை விட அணுவை விட சிறியவனாக இருந்த போதிலும் மனிதன் இயற்கையின் வலிய ஆற்றலை வெற்றிக் கொண்டு அறிவினால் புரட்சிகளினால் அவற்றை அடிமைப்படுத்தினான். அங்கங்கே கடவுள்கள் இருந்தாலும்- இருப்பதாக வைத்துக் கொண்டாலும், மனிதனுக்குள் கடவுளைப்போல ஒன்று இருக்கின்றது. அவனுக்குள்ளே ஒருவகைச் சாத்தானும் இருக்கின்றது" எவ்வளவு சரியான வார்த்தைகள் அவை.உதாரணத்திற்கு சிவப்பு விளக்கு எரிகிறதென வைத்துக்கொள்வோம். அதிகம் டிராபிக் இல்லாத நேரம். சிவப்பு விளக்கை மீறிச்செல்ல மனம் ஒத்துக்கொள்வதில்லையா?என்ன...? சிலர் கொஞ்சம் அதிகமாய் கடவுளாகிவிடுகின்றனர். சிலர் கொஞ்சம் அதிகமாய் சாத்தானாகி விடுகின்றோம்.தினமும் அழுக்காகின்றோம். அதனால் தானே தினமும் குளிக்க வேண்டியிருக்கின்றது.வேறு வழி?.மறைக்கவேண்டிவற்றை மறைத்து காட்டவேண்டியதை மட்டும் காட்டினால் மனிதன் எப்போதுமே இப்போதும் போல் சமூக மிருகமாகவே இருப்பான்.இப்போது கணிணியில் நாம் மறைக்க வேண்டியவற்றை பற்றி பார்ப்போம். :)எதோ ஒரு தளத்திலிருந்து பல அரிய(?) தகவல்களை இறக்கம் செய்து வைத்திருக்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அதை ஒரு ஃபோல்டரில் போட்டு வைத்துள்ளீர்கள். இப்போது யாரும் அந்த போல்டரை பார்த்து விடுவார்களோ என பயமாய் இருக்கின்றது. பிறருக்கு தெரியாமல் அந்த டைரக்டரியை எப்படி மறைப்பது?இது தானே உங்கள் கவலை.விடுங்கள் இதோ இருக்கின்றது ஒரு தீர்வு.


இதை தான் நண்பர் மு.பா.நாகராஜனும் முன்பொரு முறை கேட்டிருந்தார்.

Converting VCD to DVD குறித்த தங்கள் தகவலுக்கு நன்றிகள் பல. மேலும் ஓரு தகவல் அறிய ஆவல். நான் XP பயன்படுத்துகிறேன். என் பெயரில் உள்ள Drive or Folder முழுவதையும் Paasword கொண்டு மறைக்க அல்லது மூட ஆசை. ( I dont want to encrypt the files one by one, I just want to secure my drive or folder by the way of giving a passward. This is purely for maintaining privacy. I know there is an option in Tools/Folder optios/View/Do not show hidden files and folders. But this can easily be changed and my drive/folder can easily be viewed by othes who knows this option. Thats why I need password solution.)முடியுமா...?Free Hide Folder-எனும் இலவச மென்பொருள் கீழ்கண்ட சுட்டியில் கிடைக்கின்றது.அதை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள். பின் இம்மென்பொருள் வழி எந்த எந்த Folder-களையெல்லாம் மறைக்க வேண்டுமோ அவற்றையெல்லாம் ஒரு பாஸ்வேர்ட் கொண்டு எளிதாய் மறைத்து விடலாம்.அப்புறமென்ன எஞ்சாய்!!Download Free Hide Folder Product Home Page

பறிபோகும் பிரைவசி

கொஞ்ச நாட்களாகவே யாரோ என்னை கண்காணிப்பது போலவும்,நோட்டம் விடுவது போலவும் தோன்றிக் கொண்டே யிருந்தது. இன்றைக்கேனும் எப்படியும் எல்லார் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு யாருக்கும் தெரியாத கண்காணாத பிரதேசத்திற்கு போய்விடவேண்டும் என தோன்றியது.அதற்கான முயற்சியிலும் இறங்கிவிட்டேன்.கையில் செல்போனை வைத்திருந்தால் என் செல்போன் தொடர்பு கொள்ளும் டவரை வைத்து எளிதாய் என் இருப்பிடத்தை யாரும் தெரிந்து கொள்ளலாம். ஆதலால் அவசரத்துக்கு உதவும் மொபைல்போனை கூட வீட்டில் விட்டு விட்டு செல்ல தீர்மானித்தேன்.கார் திருடுபோனாலோ,வழிதப்பிப்போனாலோ அல்லது விபத்து நேரிட்டாலோ உதவும் என்ற நோக்கில் வாகனத்தின் அசைவுகளை நோட்டமிட்டுக் கொண்டேயிருக்கும் ஆன்ஸ்டார்(On Star) பொருத்தப்பட்ட எனது GM-காரில் செல்ல வேண்டாம் என முடிவெடுத்தேன். ஆன்ஸ்டார் வழி GM-க்கு நான் எங்கிருக்கிறேன் என தெரிந்துவிடும் அல்லவா?அதனால் எனது சாதாரண ஹாண்டா அக்கார்டை இயக்கி ஆகா விடுதலை என்ற சந்தோசத்தில் சில மைல்கள் தான் சென்றிருப்பேன்.வந்தது சுங்கசாவடி. இப்போது காரிலிருந்த Easypass-க்கு தெரிந்து விட்டது நான் எங்கிருக்கிறேன் என்று. இவன் இப்போது இந்த இரு குறிப்பிட்ட டோல் பூத்துகளுக்கு இடையே தான் இருக்கிறான் என அது அடித்து சொல்லிற்று.ஒரு வழியாய் ஒரு ஷாப்பிங்மால் வந்தடைந்தேன்.இங்கு நான் ஷாப்பிங் செய்ததையாவது யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் வச்சுக்கலாமென நினைத்திருந்தேன். ஆனால் நான் தேய்க்க கொடுக்கவிருக்கும் கிரெடிட் கார்டு நான் ஷாப்பிங்செய்ததை இடம் புள்ளி விடாமல் தெளிவாய் எடுத்துரைத்து விடுமே? பயம் வந்து விட்டது.அதனால் கிரெடிட் அட்டையை பாக்கெட்டில் வைத்துவிட்டு பணமாய் கொடுத்துவிடலாமென நினைத்தேன்.ATM ஒன்றைத் தேடிப்பிடித்து பணம் எடுத்தேன். அந்த ATM மெசின் தெளிவாய் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்தது.இந்தாள் இந்தநாள் இன்னநேரத்தில் இவ்விடத்திலிருந்து இவ்வளவு பணம் எடுத்தான் என்று.தலை சுற்றிக்கொண்டு வந்தது. யாரோ என்னை பார்த்துக்கொண்டே இருப்பது போல் தோன்றிற்று. வாலட்டை திறந்தேன். ஒரு டாலர் நோட்டு. அதில் அந்த கண்.அட அதே கண்.அங்கிள் சாமின் கண்.என்னை பார்த்துக்கொண்டே இருந்தது.உங்களையும் தான்.

விர்சுவல் லேப்கள்




விர்சுவல் லேப்கள்
இணைய இணைப்புப் பட்டையானது (Bandwidth)நம்மிடையே தடிமனாக தடிமனாக முன்பு சாத்தியமில்லாதன வெல்லாம் இன்று சாத்தியகிக் கொண்டிருக்கின்றன. மெல்லிய டயலப் கனெக்ஸனை வைத்துக்கொண்டு மோடம் வழி டயல் செய்து அது தான்பாட்டுக்கு ஒரு பாட்டுப்பாடிக் கொண்டு விஎஸ்என்எல்லோடு இணைய, சில நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். பின் சிறிது நேரத்தில் இணையஇணைப்பு பட்டென கட்டாகிவிடும். படு பேஜாரா போய்விடும். அந்த இனிய மோடம் பாடும் குரலை கேட்டு ரொம்பநாளாகி விட்டது. சமீபத்தில் "காதலர் தின"த்தில் வரும் "ஓ மரியா" பாடலில் அந்த மோடம் பாடும் பாடலை கேட்க நேரிட்டது. ஆச்சர்யமாய் இருந்தது.எவ்வளவு வேகமாய் போய் கொண்டிருக்கிறோம்.அகலப்பட்டையானது (Broadband) உலகத்தை சுருக்கிப்போட்டு விட்டது. அவுட் சோர்சிங் ஆகட்டும், வொர்க் ப்ரம் ஹோம் ஆகட்டும், VoIP ஆகட்டும், ஆன்லைன் படிப்புகள் ஆகட்டும், வெப்காஸ்டிங் ஆகட்டும் எல்லாமே இன்று கூடிக்கொண்டிருக்கும் பாண்ட்விட்த்தால் சாத்தியமாகிற்று. அந்த வரிசையில் தான் இந்த விர்சுவல் லேப்களும் வரும்.நல்ல பாண்விட்த்தோடு கூடிய இணைய இணைப்பு உங்களிடம் இருக்கின்றதா? மைக்ரோசாப்டின் அநேக தொழில் நுட்பங்களை நீங்கள் வீட்டிலிருந்த படியே பயிலலாம். செய்துபார்க்கலாம். பெரிய பெரிய செர்வர்கள், தேவையான மென்பொருள்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டம்கள், மற்றும் பிற உபரிகள் என எதுவும் பற்றி கவலைப்படத் தேவையில்லை.எங்கும் போக வேண்டிய அவசியமும் இல்லை. எல்லாம் சரியாக அமைக்கப்பட்ட விர்சுவல் லேப்கள் உங்களுக்காக தயாராக உள்ளன. நீங்கள் அந்த தூரத்து மைக்ரோசாப்டின் கணிணிகளின் உட்புகுந்து கற்க்கலாம்,கலக்கலாம்.எல்லாம் இலவசமாக.இங்கே அதற்கான சுட்டிகளை கொடுத்துள்ளேன். யாருக்காவது அது உதவலாம் என்ற எண்ணத்தில்.

Microsoft Virtual Labs Home

தேவeloper Virtual Labs.To quickly evaluate the latest Microsoft technologies for developers, such as VSTS, BizTalk Server, and .NET Framework 3.0 with these featured labs.
MSDN Virtual Labs

இProfessional Virtual லாப்ஸ்
.Experiment with the newest features of Microsoft server products such as 2007 Microsoft Office system, Exchange 2007, and Windows Vista in these featured
TechNet Virtual Labs

தங்கமும் தாளும்


புராதன மன்னர்கள் காலங்களில் பொற்காசுகள் (தங்க காசுகள்) மற்றும் வெள்ளி காசுகள் புழங்கி வந்தன என்பார்கள்.இதுமாதிரியான பூமியின் அபூர்வ உலோகங்களில் இருந்து காசுகள் செய்ததால் அக்காசுகள் தானே தனக்கென ஒரு மதிப்பை தாங்கி உருக்காலைகளை விட்டு வெளிவந்தன. இன்றும் தங்கம் மற்றும் வெள்ளிகளின் மதிப்பு நீடித்திருக்கின்றது. கடவுள் மனிதனுக்கென அளித்த பணம் இது தானோ என்னவோ?.என்றைக்கு மனிதன் அச்சகத்தில் பணத்தை காகிதத்தில் இஷ்டத்திற்கும் அச்சடிக்க தொடங்கினானோ அன்றைக்கு வந்தது வினை.இன்று பொட்டி நிறைய பணத்துக்கு கூட ஒன்றும் வாங்க முடிவதில்லை.எங்கும் பணவீக்கம் அதாவது Inflation. பொருளாதார வீழ்வுகளிலிருந்து எழ அமெரிக்க ஐரோப்பிய சென்ட்ரல் பாங்குகள் பில்லியன் கணக்கில் டாலர்களையும் யூரோக்களையும் அச்சடிக்கின்றார்கள். ரொம்ப எளிதாய் European Central Bank pumps $500 bn into banking system-னு பேப்பர்களில் ஒரு வரி. அவ்ளோதான் செய்தி. விளைவுகள்? யாருக்கு தெரியும்.நம்மூர் "இரண்டு ரூபாய்" தாளை விட "ஒரு ரூபாய்" காசுக்கு மதிப்பு அதிகம் தெரியுமோ? அதாவது இரண்டு ரூபாய் தாளின் மதிப்பு இரண்டு ரூபாய்தான். ஆனால் ஒரு ரூபாய் நாணயத்தின் மதிப்பு ஏழு ரூபாயாம்.எப்படி? அந்த ஒரு ரூபாய் காசு உலோகத்தை உருக்கி சவரபிளேடு செய்து விற்றால் அது மூலம் ஏழு ரூபாய் கைக்கு வரும். ஆனால் பேப்பர் பணம் வெறும் தாள் தான். இதுதான் உலகளாவிய அனைத்து காகித கரன்சிகளின் நிலையும் கூட.டாலர் மதிப்பு இறங்குவதும் தங்கம் மதிப்பு ஏறுவதும் காகித கரன்சிகளில் மக்கள் நம்பிக்கை இழப்பதையும் தங்கத்தின் மீது மக்கள் அபார நம்பிக்கை வைத்திருப்பதையும் காட்டுவதாக கூட இருக்கலாம். அல்லது ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு டன் கணக்கில் தங்கம் வாங்கி செயற்கையாக தட்டுப்பாட்டை வருவித்து அதன் விலையை வேண்டுமென்றே உயர்த்தி பின் டமாலென அத்தனையையும் வித்து லாபம் சம்பாதிக்க துடிக்கும் சில பெரும்புள்ளிகளின் சித்துவேலையாகவும் இருக்கலாம்.

தேடிவரும் ஏமாற்று லாட்டரி மின்னஞ்சல்கள்



இப்படியாக எப்போதாவது Microsoft-டிடமிருந்தோ அல்லது Yahoo போன்ற பிரபல கம்பெனிகளிடமிருந்தோ உங்களுக்கு மெயில் வந்திருக்கின்றதா?"Your email address have just won a Yahoo cum Windows live prize money of (ONE MILLION BRITISH POUNDS STERLING) (GBP£1,000,000.00) today 9th of January,2008.Award winners emerge through random selection of all active email subscribers online. Six are selected monthly to benefit from this promotion.This Prize Award must be claimed in not later than 15 days from date of draw notification after which unclaimed prizes are cancelled."எப்படி இருக்குது இது?அல்லது நைஜீரியாவிலிருந்து யாரோ ஒரு மில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் உங்கள் உதவி வேண்டி ஈமெயில் வழி தொடர்புகொள்கின்றாரா? .உஷார்... உஷார்..ஈஸியா பணம் கிடைக்குதேவென ஏமாறுபவர்கள் இதில் ஏராளம்.எப்படி?ஏதோ ஒரு இணையதளத்திலிருந்து உங்கள் ஈமெயில் ஐடி கண்டெடுக்கப்பட்டு சில ஏமாற்றுகாரர்கள் உங்களுக்கு ஈமெயில் வழி வலைவிரிப்பார்கள். அல்லது George@yahoo.com எனப் பொதுப்பெயர் மெயில் ஐடிகளுக்கு இம்மாதிரியானமெயில்களை அனுப்புவார்கள். George@yahoo.com என ஒருவர் இல்லாமலா போய்விடுவார்?இந்த மோசடியில் பலரும் மாட்டுவது எப்படி?லாட்டரியில் வெற்றி பெற்ற பணத்தை அல்லது நைஜீரிய வங்கியிலிருந்து மீட்கப்பட்ட பணத்தை பெற முதலாவது Identification-காக உங்கள் பாஸ்போர்ட் காப்பியை அனுப்பச் சொல்வார்கள். அவ்ளோதான் உங்கள் தனிப்பட்ட தகவல்கள்திருடப்பட்டு விட்டன. யார் வேண்டுமானாலும் இப்போது தன்னை உங்களைப் போல் போர்ஜரி செய்து கொள்ளலாம்.இரண்டாவது அந்த வெற்றிபெற்ற பணத்தை பெற ஒரு Transaction fee தொடக்கத்தில் கட்ட வேண்டும் என்பார்கள். நீங்கள் அப்பாவியாய் கட்டுவீர்கள். பின் அந்த பணத்துக்கான வரியை முதலிலேயே அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும் என சில டாலர்கள் உங்களிடமிருந்து பிடுங்குவார்கள். பின் அப்பணம் ஒரு குறிப்பிட்ட வங்கியில் தான் டெப்பாசிட் செய்யப்படும்.எனவே அந்த பேங்கில் தயவு செய்து ஒரு அக்கவுண்ட் திறவுங்கள் என்பார்கள். அந்த வங்கியில் கணக்கு திறக்க குறைந்தது $3000 போட வேண்டும் என நிபந்தனை வேறு இருக்கும். கடைசியில் தான் உணர்வீர்கள் அது ஒரு பிராடு ஆன்லைன் வங்கி என.ஈஸி பணம் என என்றுமே சாத்தியம் இல்லை. எந்த ஒரு தனிநபரும் அல்லது எந்த ஒரு நிறுவனமும் மில்லியன் டாலர்களை வாரி வாரி வழங்கவும் தயாரில்லை. வாங்காத லாட்டரி உங்களுக்கு எப்படி விழும்.பேராசையால் ஏமாறாமல் இருக்க இங்கே இது ஒரு எச்சரிக்கை மணி.இம்மாதிரி மெயில்களையெல்லாம் நம்பி ஏமாந்து பணத்தை இழந்து தனக்குள்ளே புழங்கி வெட்கப்பட்டு யாரிடமும் வாய் திறந்து சொல்லாதிருப்போர் எண்ணிக்கை தான் இங்கு அதிகம்.சிங்கப்பூரிலிருந்து நண்பர் சங்கர் இது பற்றி விசாரித்ததால் இதை ஒரு பதிவாய் போட வேண்டியதாயிற்றுது.நன்றி சங்கர்.மேலும் தகவல்களுக்கு