



A.R.RAHMAN பாடல்களை 5.1 channel sound system ல் கேட்டு இருக்கிறீர்களா. ஆஹா ஆஹா .........அதை சொல்ல வார்த்தைகளே இல்லை மக்கா.
எல்லா பாடல்களையும் பொதுவாக சொல்லவில்லை ..குறிப்பாக சில மெலடி பாடல்கள் ரொம்ப அருமையாக ஆறு சேனல்களில் வித்யாசமா பதிவு பண்ணிஇருப்பார் . வேறு எந்த இசை அமைபாளர்களும் இந்த 5.1 channel உத்தியை இவ்வளவு அருமையாக பயன்படுத்தியதாக தெரியவில்லை.
உதாரணத்துக்கு .......சில்லுனு ஒரு காதல் படத்தில் வரும் நியூயார்க் நகரம் பாடல் மற்றும் "அன்பே வா என் அன்பே வா " பாடல்களை சொல்லலாம்.
உங்கள் கணினியில் 5.1 சேனல் அவுட் புட் இருந்தால் இதை முயற்சித்து பாருங்கள்
இல்லாவிட்டாலும் உங்கள் கணினியில் 5.1 channel sound card ஒன்று வாங்கி பொருத்தி இதை முயற்சியுங்கள்
Boys படத்திலிருந்து இன்று வரை உள்ள சிறந்த தமிழ் பாடல்கள் 5.1 ல் வெளிவந்துள்ளன
net' ல் கூட கிடைக்கின்றன ........இமேஜ் பைலாக இது சில டாரண்ட் சைட்டுகளில் கிடைக்கும் இதை பதிவிறக்கம் செய்து ஒரு dvd இல் எழுதிக்கொள்ளுங்கள். ஒரு படத்தின் பாடல்கள் சுமாராக 370 mb வரும்.
உங்கள் கணினியில் 5.1 sound speaker system வாங்கி connect செய்து கொள்ளுங்கள்.
உங்கள் கணினியில் klite codec pack install செய்துகொண்டு (download link http://www.free-codecs.com/download/K_Lite_Codec_Pack.htm ) 5.1 சேனல் dvd யை ஓட விடுங்கள் . media player இல் ட்ரை பண்ணுங்க அதுவே சிறந்தது.
click Tools-options-DVD-Advanced இப்போது உங்களுக்கு ac97 mixer தெரியும் இதன் மூலம் நீங்க ஆறு சேனல் களாக வரும் இசையை ரசிக்கலாம் .........center speaker இல் பாடுபவரின் voice track மட்டும் வரும் .அதை மட்டும் விட்டுவிட்டு மற்ற அனைத்து சேனல் களையும் சுத்தமாக குறைத்து விட்டால் எந்த இசையும் இல்லாமல் ஏதோ அந்த பாடகர் உங்களுக்காக மட்டும் உங்கள் அறையில் வந்து பாடுவது போல இருக்கும்.
அன்பே வா அன்பே வா பாடலை போட்டு விட்டு ac 97 mixer மூலம் front speakers volume ஐ சுத்தமாக குறைத்து rear speakers மற்றும் center speaker இல் அமைதியான சூழலில் கண்ணை மூடி வித்யாசமான அந்த பாடலின் புதிய பரிமாணத்தை அனுபவியுங்கள். நியூயார்க் நகரம் பாடலையும் இதே போல் கேட்கலாம் மிகவும் இனிமையாகவும் வித்யாசமாகவும் இருக்கும்.(கொசுறு)
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ
பேச்செல்லாம் தாலாட்டுப் போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காஃபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே
இந்த தனிமை நிமிஷங்கள் வருஷமானதேனோ?
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ?
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
நாட்குறிப்பில் நூறு தடவை
உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க
பெயரும் ஆனதென்ன தேனா?
ஜில்லென்று பூமி இருந்தும்
இந்த தருணத்தில் குளிர்காலம் கோடையானதேனோ?
வா அன்பே! நீயும் வந்தால்
செந்தணல் கூடப் பனிக்கட்டிப் போல மாறுமே!
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது.
பனியும் படர்ந்தது.
கப்பல் இறங்கியே
காற்றும் கரையில் நடந்தது.
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ
தனிமை தனிமையோ
கொடுமை கொடுமையோ